Connect with us
jyotika

Cinema History

விஜயோடு நடிக்கமாட்டேன்!.. இத்தனை ஹீரோயின் தேவையா?!.. தளபதியை டென்ஷன் ஆக்கிய ஜோதிகா!…

மும்பையை சேர்ந்தவர் ஜோதிகா. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நக்மாவின் சகோதரி இவர். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜோதிகாவை மிகவும் பிடித்துப்போனது. அதுவும் சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல ஹீரோக்களுடனும் ஜோதிகா ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் அவர் ஜோடி போட்டு நடித்த குஷி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று ஜோதிகாவுக்கு அப்படம் ரசிகர்களையும் பெற்று தந்தது. அதன்பின் திருமலை படத்தில் விஜயுடன் ஜோதிகா நடித்திருந்தார்.

அதன்பின் சில வருடங்களில் சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சில வருடங்கள் ஜோதிகா சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால், அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படத்தில் விஜயின் மனைவியாக ஜோதிகாவை நடிக்க வைக்க வேண்டும் என அட்லி மிகவும் ஆசைப்பட்டார். ஜோதிகாவும் அதை ஏற்று இரண்டு நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த படத்தில் நடிப்பது பிடிக்காமல் ஜோதிகா விலகினார். இது விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

மெர்சல் படத்தில் அப்பா விஜய்க்கு ஒரு ஜோடி, அவர்களுக்கு பிறக்கும் இரண்டு விஜய்களுக்கும் ஜோடி என மொத்தம் மூன்று கதாநாயகிகள் நடித்தார்கள். இதுதான் ஜோதிகாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு எதற்கு மூன்று ஹீரோயின்கள்? என ஜோதிகா நக்கல் அடித்ததும் விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவே, ஜோதிகா நடிக்க மறுத்தபோது விஜய் தரப்பில் அவரிடம் பேச கூட முயற்சி செய்யவில்லையாம். அட்லி எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிய ஜோதிகாவுக்கு பதில் நித்யாமேனன் அந்த வேடத்தில் நடித்தார்.

ஜோதிகா செய்தது இப்போதுவரை விஜயால் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: மிருகங்களின் பெயர்களை டைட்டிலாக கொண்ட விஜய் படங்கள்… எல்லாமே அட்டர் ஃப்ளாப் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top