More
Categories: Cinema News latest news

ராஷ்மிகாவையும் பிரசாந்த் நீலையும் அசிங்கப்படுத்தினாரா காந்தாரா ஹீரோ?.. கிளம்பிய புது பிரச்சனை!..

தமிழ் சினிமாவில் மட்டும் தான் பிரச்சனை நடக்குமா? நாங்களும் பப்ளிசிட்டி பிரச்சனையை ஆரம்பிக்கிறோம் என கன்னட திரையுலகிலும் கஷ்ட காலத்தை ஆரம்பித்து விட்டனர்.

கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், இந்தி என முன்னேறிக் கொண்டே செல்கிறார். ஆனால், தன்னை வளர்த்து விட்ட சொந்த மண்ணான கன்னட திரையுலகை அவர் கண்டுக்கவே இல்லை என்கிற பிரச்சனை தொடர்ந்து எழுந்துக் கொண்டே இருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கத்தில் நடிக்கப் போகும் பொன்னியின் செல்வன் நடிகர்!.. ஹீரோயின் யாரு தெரியுமா?..

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் கன்னட சினிமாவை உலகம் முழுக்க பிரபலமாக்கினார். ஆனால், தற்போது பிரபாஸின் சலார் படத்துக்காக டோலிவுட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், அவர்கள் இருவரையும் சுட்டிக் காட்டி அசிங்கப்படுத்தும் விதமாக காந்தாரா படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி பேசியுள்ளதாக பிரச்சனை வெடித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கன்னட திரையுலகில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  அச்சச்சோ!.. யாஷிகா ஆனந்த்தை தொடர்ந்து ஜி.பி. முத்து காரும் விபத்துல சிக்கிடுச்சாம்.. என்ன ஆச்சு?

அடுத்ததாக காந்தாரா 2 படத்தை இயக்கப் போவதாக ரிஷப் ஷெட்டி அறிவித்து அதற்கான டைட்டில் டீசரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.  அந்த விழாவில் பேசிய அவர், கன்னட திரையுலகுக்கு ஒரே ஒரு ஹிட் கொடுத்து விட்டு சாண்டல்வுட்டை விட்டு ஓடிப் போய் விட மாட்டேன் என ரிஷப் ஷெட்டி பேசியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா, பிரசாந்த் நீல் எல்லாம் கன்னட திரையுலகை விட்டு விட்டு மற்ற திரையுலகிற்கு சென்று விட்டதை அவர் குத்திக் காட்டியிருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. பிரசாந்த் நீல் அடுத்து கேஜிஎஃப் 3 படத்தை இயக்கினால் அது 1500 கோடி வசூலுக்கு மேல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Published by
Saranya M

Recent Posts