படுக்க வா பல லட்சம் தரேன்!.. நடிக்க வாய்ப்பு தரேன்னு சொன்னாங்க!. போட்டு உடைக்கும் ரவுடிபேபி சூர்யா..

சில வருடங்களுக்கு முன்பு டிக்டாக் ஆப் லைவில் இருந்த போது அதைப்பயன்படுத்தி பலரும் பிரபலமானார்கள். அதில், ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா ஆகியோர் முக்கியமானவர்கள். ரவுடி பேபி சூர்யா கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி வீடியோ வெளியிட்டு பிரபலமானார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

ஜிபி முத்துவுடன் நெருக்கமாக இருந்த சூர்யா அவருடன் இணைந்து பல வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கென ரசிகர்களும் உருவானார்கள். ஒருகட்டத்தில் ஜிபி முத்து உள்ளிட்ட பலருடனும் மோதல் ஏற்பட்டு எல்லோரையும் திட்டி வீடியோ போட, அவர்கள் பதிலுக்கு வீடியோ போட என டிக்டாக் ஆப்பே களோபரமானது.

rowdy

rowdy

ஒரு சிறுவன தவறாக பேசியதாக சூர்யா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், ஒரு மசாஜ் செண்டரில் விபச்சாரம் செய்ய போனதாக போலீசாரால் கைதும் ஆகி பரபரப்பை ஏற்படுத்தினார். சில வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துள்ள அவர் தொடர்ந்து பல விஷயங்களை அம்பலப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: எப்பா இது ‘ஜெய்லர்’ படமே இல்லை! ஆசையா போன ரசிகர்களுக்கு காத்திருந்ததோ பேரதிர்ச்சி

சமீபத்தில் பேசிய ஊடகம் ஒன்றில் ‘என்னுடன் நெருக்கமாக பழகியவர்கள் பலரும் என்னை ஏமாற்றிவிட்டனர். நான் சிறைக்கு சென்ற போது என்னை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. என்னுடன் நெருக்கமாக பழகி, என் வீட்டில் விருந்து சாப்பிட்டவர்கள் பலரும் கூட என்னை கண்டுகொள்ளவில்லை.

அதில் ஜிபி முத்துவும் ஒருவர். அவர் ஒரு பச்சை துரோகி. ஏன் வயதான ஒருவருடன் வாழ்கிறீர்கள் என என்னை கேட்கிறார்கள். எனக்கு அன்பு மட்டும்தான் தேவை. உடல் பசி இல்லை. அவர் மிகவும் நல்லவர். நான் அடித்தால் கூட என்னை திருப்பி அடிக்க மாட்டார். பக்குவம் உள்ளவர். சிறையில் பல வேதனைகளை அனுபவித்தேன்.

அந்த மசாஜ் செண்டரில் நான் இருந்தேன். ஆனால், விபச்சாரம் செய்யவில்லை. அதை செய்ய வேண்டுமெனில் நான் என் வீட்டிலேயே செய்திருப்பேன். நான் ஏன் அங்கே செல்ல வேண்டும்?.. திட்டமிட்டு என்னை அதில் மாட்டிவிட்டனர். உண்மையில் பணம் வாங்க மட்டுமே நான் அங்கு சென்றேன். அந்த வழக்கிலிருந்து விரைவில் வெளியே வருவேன்.

விடுதலைக்கு பின் என்னை வெளிநாட்டுக்கு படுக்க கூப்பிடுகிறார்கள். பல லட்சம் தருகிறேன் என்கிறார்கள். அதேபோல், பல விருது வாங்கிய இயக்குனர்களின் உதவி இயக்குனர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை. என் எதிரிகளின் முன் நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். கண்டிப்பாக இன்னும் சில வருடங்கள் கார், வீடு என செட்டில் ஆவேன்’ என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ‘லேடி சூப்பர் ஸ்டார்’னா இவங்கதான்! நயனை தூக்கி வச்சு கொண்டாடுறதே வேஸ்ட் – பளீச்சினு சொன்ன கஸ்தூரி

 

Related Articles

Next Story