Connect with us

Cinema News

விஜயகாந்த் பத்தி பேசும் போது நடுவுல ஏன் விஜய் வராரு!.. சட்டென டென்ஷனான எஸ்.ஏ. சந்திரசேகர்!..

விஜயகாந்த் உயிரிழந்த போது நேரில் வர முடியாத அளவுக்கு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் துபாயில் இருந்தார். ஆனால், நடிகர் விஜய் கேப்டன் மறைந்த அன்று இரவே கூட்ட நெரிசலை கூட பொருட்படுத்தாமல் வந்து அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்தது. கூட்டத்தில் சில விஷமிகள் விஜய் மீது செருப்பை எல்லாம் வீசிய விபரீதங்களும் ஏற்பட்டன.

இந்நிலையில், சமீபத்தில் சென்னை திரும்பிய எஸ்.ஏ. சந்திரசேகர் தொடர்ந்து பல யூடியூப் சேனல்களில் விஜயகாந்த் பற்றி பேசி வருகிறார். பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் விஜயகாந்த் பற்றியும் அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர் சங்கம் சரியாக அஞ்சலி செலுத்தாது குறித்தும் கேட்ட கேள்விக்கு அது நடிகர் சங்கத்துக்குத் தான் அசிங்கம் விஜயகாந்துக்கு ஒரு துளி கூட அசிங்கம் இல்லை என்று பளிச்சென பதில் அளித்தார்.

இதையும் படிங்க: ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு ரணகளமா இருக்கே!.. ஜூனியர் என்டிஆரின் தேவரா க்ளிம்ப்ஸ் எப்படி இருக்கு?

விஜயகாந்த் சண்டை போடும் போது 20 பேரை அடித்தாலும் நம்பக் கூடிய அளவுக்கு அவரது உடல் அமைப்பு, தோற்றம், கம்பீரம் எல்லாம் இருக்கும் என்றார்.

திடீரென விஜய் பற்றிய கேள்வியை தொகுப்பாளர் எழுப்பியதும் அவரை நிறுத்து என சொல்லிய எஸ்.ஏ. சந்திரசேகர், விஜயகாந்த் பத்தி பேசும் போது நடுவுல எதுக்கு என் புள்ள விஜய் வராரு என கேட்டு டென்ஷன் ஆகி விட்டார்.

இதையும் படிங்க: பால் கொழுக்கட்டைன்னா சும்மாதானா!.. பார்த்தவுடனே பசியை எடுக்க வைக்கிறாரே.. தாறுமாறு தமன்னா!..

வேறு ஏதோ கேள்வி கேட்க வந்த தொகுப்பாளர் எஸ்.ஏ. சந்திரசேகரை கூல் செய்யும் விதமாக விஜயகாந்த் உடல் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில், அதை பார்த்து 10 செகண்ட் விஜய் அஞ்சலி செலுத்தியது குறித்து தான் கேட்க வந்தேன் என பம்மினார்.

உடனே, அதெல்லாம் நன்றி விசுவாசம் சார். நாம இந்த இடத்துக்கு வர முக்கிய காரணங்களில் ஒருவராக அவரும் இருக்காரே என நினைத்தாலே போதும் அதுதான் கண்களில் கண்ணீராக வந்து அஞ்சலி செலுத்த வைக்கும் என்றார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top