த்ரிஷா நடிச்சு கண்டுக்கல.. அசால்ட்டா நடிச்சு பேர் வாங்கிய நயன்! என்ன மேட்டர் தெரியுமா?

Nayanthara Trisha: தமிழ் சினிமாவில் த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னனி நடிகைகளாக இருந்து வருகிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த தமிழ் சினிமாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். நயன் ஐயா என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்திருப்பார்.

அதன் பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தில்தான் ஹீரோயினாக நடித்திருப்பார். சினிமாவில் நயனை விட த்ரிஷா சீனியர் என்றாலும் இருவரும் இன்று ஒரு போட்டி நடிகைகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு பேன் இந்திய நடிகைகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மனசெல்லாம் படத்தின் இயக்குனரான சந்தோஷ் கோலமாவு கோகிலா படத்தை பற்றிய அவருடைய கருத்தை ஒரு பேட்டியில் இப்போது பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: ரீ ரிலிஸ் படத்துக்கும் மட்டும்தானா? நாங்களும் வருவோம்.. மீண்டும் சூப்பர் ஹிட்டான அந்த சீரியல்

அதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது மனசெல்லாம் படம் இப்போது வந்திருக்க வேண்டிய படம். இந்த காலகட்டத்தில் ரிலீஸ் ஆகியிருந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கும். இப்போதுள்ள படங்களில் அதிகமாக ஒர்க் அவுட் ஆகுவது ப்ளாக் காமெடிதான். அதை மனசெல்லாம் படத்தில் அப்பவே நான் செய்திருக்கிறேன்.

அதை போல் கோலமாவு கோகிலா படத்தில் யோகிபாபு நயனை காதலிப்பது போல கதை இருக்கும். அதை ரசிகர்கள் மிகவும் காமெடியாக பார்த்து அந்தப் படத்தை ஹிட்டாக்கினார்கள். நானும் இதே ஒரு கான்செப்ட்டைத்தான் மனசெல்லாம் படத்தில் வைத்தேன். வையாபுரி மற்றும் சுக்கிரன் த்ரிஷாவை காதலிப்பது போல மனசெல்லாம் படத்தில் வைத்திருப்பேன். ஆனால் மக்கள் அதை மிகவும் சீரியஸாக பார்த்தார்கள்.

இதையும் படிங்க: நைட் 12 மணிக்கு கோவை சரளாவின் வீட்டு கதவை தட்டிய இயக்குனர்!.. மனுஷன் இப்படியா இருப்பாரு!..

இதுதான் அந்தப் படம் ஓடாததற்கு ஒரு காரணம். ஆனால் இப்போது மனசெல்லாம் படம் வெளிவந்திருந்தால் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக மாறியிருக்கும் என சந்தோஷ் மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

 

Related Articles

Next Story