இனி எல்லாமே டபுள் ஹீரோ சப்ஜெக்ட்தானா? சந்தானம் ஐடியா கைகொடுக்குமா?

santhanam
Santhanam: சந்தானம் எத்தனையோ படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் ஒரு சில படங்களைத் தவிர பெரிய அளவில் மற்ற படங்கள் போகவில்லை. அதே நேரம் அவர் காமெடியனாக நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட். அதுல ஒண்ணுதான் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா. சுந்தர்.சி. இயக்கத்தில் நீண்ட நாளாக முடங்கிக்கிடந்த படம் ரிலீஸ் ஆனதும் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் சந்தானம் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சிம்புவின் 49வது படத்தில் சந்தானம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராம்குமார் பாலகிருஷ்ணன் படம். தக் லைஃப் படத்தோட பிரஸ்மீட்டுக்காக 2 நாள் கழிச்சி எஸ்டிஆர் தன்னோட 49வது படத்துக்காக புனேவுக்குப் போறாராம். பர்ஸ்ட் ஷெடுல் அங்கே தான் ஸ்டார்ட் பண்றாங்களாம்.
இந்தப் படத்துல சந்தானம் காமெடியன் மட்டுமல்ல. படத்துல அவரது கேரக்டர் கடைசியில சோகமா முடிகிற மாதிரி வச்சிருக்காங்களாம். சந்தானத்தோட மைன்ட் செட் படத்துல டபுள் ஹீரோ. அதுல நாமும் ஒரு ஹீரோ அப்படின்னுதான் இருக்காம்.

இதுக்கு அடுத்து பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் ஆரம்பிக்கிறாங்க. அதுலயும் சந்தானம் ஒரு ஹீரோ. அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் தான். இந்த மாதிரி சந்தானம் இப்ப நடிக்கிறதனால அவரு ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருந்த 2 படத்தையும் தள்ளி வச்சிட்டாராம்.
அதுல ஒண்ணு யாமிருக்க பயமேன் டைரக்டர் டிகேயோட படம். அப்புறம் இன்னொரு படம். அவரு ஹீரோவா நடிச்சா 5 கோடி கொடுக்குறதே ஜாஸ்தி. ஆனா காமெடியனா நடிக்கும்போது பார்த்தா 10 கோடி கேட்டு, 8 கோடி வரை கிடைக்குதாம். அதனால இதுக்குத்தானே அவர் முன்னுரிமை கொடுப்பாரு என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. ஒருவேளை மதகஜராஜாவுக்குப் பிறகு மனசு மாறி இருக்கலாம்.