More
Categories: Cinema News latest news

அந்த மாதிரி படத்தை எல்லாம் எடுக்கவே நினைக்கல!.. ஆனால்?.. புலம்பித்தள்ளிய சந்தோஷ் ஜெயக்குமார்!..

இருட்டு அறையில் முரட்டுக் குத்து மாதிரியான படங்களை எடுக்க நான் நினைக்கவே இல்லை என்றும் ஆனால், தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தன்னிடம் அதுபோன்ற அடல்ட் பட ஸ்க்ரிப்ட்களை தான் கேட்கின்றனர் என புலம்பித் தள்ளியிருக்கிறார் இயக்குநரும் நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

கெளதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியான ஹர ஹர மகாதேவகி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். அதன் பின்னர் அவர் எடுத்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்திலும் கெளதம் கார்த்திக் நடித்திருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க:தம்பியை ஹீரோவாக்கும் விஷ்ணு விஷால்!.. டைட்டில் என்ன தெரியுமா?.. கமலே வாழ்த்திட்டாரே!..

தொடர்ந்து பிட்டு படங்களில் நடிக்கிறாரே நவரச நாயகன் கார்த்தியின் மகன் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில், இரண்டாம் குத்து படத்தில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக இயக்குநரான சந்தோஷே அந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

அடல்ட் படமாக அவர் எடுக்காத ஒரே படம் என்னவென்றால் ஆர்யா, சாயிஷா நடித்த கஜினிகாந்த் படம் தான். இரண்டாம் குத்து படத்திற்கு பிறகு பாய்ஸ் என மீண்டும் அடல்ட் சப்ஜெக்ட் படத்தை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கவுண்டமணி – செந்தில் பிரிந்தது இதனால்தான்!. சோலோவா கெத்து காட்டிய கவுண்ட்டர் மன்னன்..

கடந்த வாரம் வெளியான அந்த படம் வெளியானதே தெரியாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியுள்ள சந்தோஷ் பி. ஜெயக்குமார் நல்ல கதைகள் தன்னிடம் உள்ளதாகவும் ஆனால், தயாரிப்பாளர்கள் அதையெல்லாம் கேட்கவே தயாராக இல்லை என்றும் அடல்ட் ஒன்லி படங்களை மட்டுமே கேட்பதாகவும் புலம்பியுள்ளார்.

பிரபுதேவாவை வைத்து அவர் இயக்கிய பொய்க்கால் குதிரை படமும் ஓடாமல் போனதற்கு காரணம் அந்த படம் நல்லா இருந்தும் நிறைய பேர் தியேட்டருக்கு வந்து பார்க்காதது தான் எனக்கூறியுள்ளார்.

Published by
Saranya M

Recent Posts