பரிதவித்த சரத்குமார்!.. முட்டுக்கட்டை போட்ட படக்குழு.. காஞ்சனா 4-ஆக மாறிய லாரன்ஸ்!..

கிட்டத்தட்ட 2 வருடங்களாக கிடப்பிலேயே இருந்த ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக இப்பொழுது தான் சூடுபிடித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் நடித்து இந்தப் படத்திலும் படுபிஸியாக நடித்து வருகிறார் லாரன்ஸ்.

sarath1

sarath1 lawrence

ஃபுல் டெடிகேட் நடிகர் என்றால் அது லாரன்ஸ் தான். அந்த அளவுக்கு எப்படியாவது இந்த ருத்ரன் படத்தை முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இந்தப் படத்தை ஃபை ஸ்டார் கதிரேசன் இயக்க ஜிவி.பிரகாஷ் இசையில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் நாசர், சரத்குமார் மற்றும் பல நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் போது சரத்குமார் படக்குழுவினரிடம் என்னை இரவு 11 மணியளவில் தயவு செய்து விட்டு விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பை விடாமல் நடத்த இரவு 11 மணியையும் தாண்டி படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனராம். இதனால் கடுப்பான சரத்குமார் யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பை விட்டு எழுந்து போய்விட்டாராம்.

sarath3

lawrence

யாருக்காமல் தெரியாமல் கிளம்பி விட சரத்குமாரை தேடிய போது தான் தகவல் தெரிந்திருக்கிறது. இந்த விஷயம் அறிந்து படத்தின் ஹீரோவான லாரன்ஸும் கோபத்தின் உச்சிக்கே சென்று அவரும் படப்பிடிப்பில் இருந்து போய்விட்டாராம்.

இதையும் படிங்க :தப்பு பண்ணது யாரோ ஒருத்தர்… ஆனால் சண்டைப்போட்டுக்கிட்டது எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்… காலக்கொடுமை!!

மனுஷன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் கால்ஷீட்டிலயும் நடித்து போராடி எப்படியாவது ருத்ரன் படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது சரத்குமார் இப்படி செய்தது லாரன்ஸுக்கு ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியானது.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it