விழுந்தாலும் பாதாள குழியிலதான் விழுவேன்! தனுஷால எவ்வளவு பட்டாலும் திருந்தாத தயாரிப்பாளர்

Actor Dhanush: கோலிவுட்டில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். அசுரனாக நடிப்பு அரக்கனாக இன்றைய தமிழ் சினிமாவில் நடிப்பில் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் தனுஷ். சமீப கால படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வித்தியாசமான கதைகளத்துடன் மக்களை வியந்து பார்க்க வைத்த நடிகராக தனுஷ் இருந்து வருகிறார்.

தற்போது தனுஷின் நடிப்பில் அவருடைய 50ஆவது படம் ராயன் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது. அதே நேரம் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் இணைந்து குபேரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குபேரன் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் தெலுங்கு இயக்குனருடன் தான் கூட்டணி வைக்கப் போவதாக தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் இசை ஞானத்தை பார்த்து மிரண்டு போன இசை அமைப்பாளர்!. எல்லா ஏரியாவிலும் அவர் கில்லி..

இந்த நிலையில் தனுஷை வைத்து தொடர்ந்து நான்கு படங்களுக்கு அக்ரிமெண்ட் செய்து கொண்ட சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனுஷின் மீது பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தனுஷை வைத்து தொடரி, மாறன், கேப்டன் மில்லர் போன்ற படங்களை தயாரித்த சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த படத்தையும் தனுஷை வைத்து தான் தயாரிக்க இருந்தது.

ஆனால் தனுஷ் அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனருடன் பிசியாக இருப்பதால் அவருடைய கால் சீட்டு கிடைக்காமல் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி கேள்விப்பட்ட ரசிகர்கள் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ஏற்கனவே மூன்று படத்தின் தோல்வி போதாதா? மறுபடியும் தனுஷை வைத்து படம் எடுக்க வேண்டுமா? என அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விலங்குகளுக்கும் கேரக்டர் ரோல்.. எம்ஜிஆருடன் நட்பு.. வேற லெவலில் வெளியான தேவர் பிலிம்ஸ் படங்கள்..

 

Related Articles

Next Story