latest news
சிவாஜியே அப்படி நடிச்சார்.. நாம என்ன?.. பாகுபலியில் நடிக்க சத்யராஜ் ஒப்புகொண்ட காரணம்!…
தெலுங்கில் ஏற்கனவே சில படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஜமவுலி. எம்.ஜி.ஆர் அடிமைப்பெண் கதையை கொஞ்சம் உல்டா செய்த கதைதான் என்றாலும் அதை விஸ்வலாகவும், கதை, திரைக்கதை, வசனங்களிலும் படத்தை வேறுலெவலுக்கு கொண்டு போனார் ராஜமவுலி . இந்த படத்தில் நடிகர் சத்யரஜுக்கு கட்டப்பா என்கிற முக்கிய வேடம் கிடைத்தது. இதற்கு முன் சத்யராஜ் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கட்டப்பா கதாபாத்திரம் சத்யராஜை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது..
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சத்யராஜ் பாகுபலி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் பற்றி பேசியிருக்கிறார். ராஜமௌலி சார் உண்மையானவர். இந்த படத்தில் நடிப்பதற்காக என்னிடம் கதை சொல்ல வந்தார்.. ‘இந்த படத்தில் ஒரு ஷாட்டில் ஹீரோவின் காலை எடுத்து உங்கள் தலையில் வைப்பது போல் ஒரு காட்சி இருக்கு.. நீங்கள் நடிப்பீர்களா?’ என்று கேட்டார்.. நீங்கள் சொல்லுங்கள் சார்.. கதை நன்றாக இருந்தால் நடிக்கிறேன் என்றேன்.. ‘இல்லை.. எப்படி இருந்தாலும் நீங்கள் நடிக்க மாட்டீர்கள் என்றால் நான் கதை சொல்லவில்லை’ என்றார்..
அப்போதுதான் திருமால் பெருமை படத்தில் சிவாஜி சார் நடித்த காட்சி நினைவுக்கு வந்தது.. அந்த படத்தில் ஒரு திமிரான ராஜாவாக இருக்கும் சிவாஜி சார் கடவுள் அவதாரத்தில் இருக்கும் சிவக்குமாரின் காலில் உள்ள ஒரு மோதிரத்தை தனது வாயால் கழட்ட முயற்சி செய்வார்.. அப்போது சிவாஜி பெரிய நடிகர்.. சிவக்குமார் ஒரு அறிமுக நடிகர்.. சிவாஜி சாரே அப்படி நடிக்கும் போது நமக்கென்ன என எனக்கு தோன்றியது.. ராஜமவுலி முழுக்கதையையும் சொன்னார். இந்த கதாபாத்திரத்தை விடக்கூடாது’ என்று எனக்கு தோன்றியது என பேசியிருக்கிறார்
