More
Categories: Cinema News latest news

ஹீரோக்களுக்கு முக்கியமான ஒன்னு.. அது விஜய்கிட்டதான் இருக்கு! இப்படி சொல்லிட்டாரே சத்யராஜ்

Actor Vijay: கோலிவுட்டில் ஒரு வசூல் மன்னனாக கலக்கிக் கொண்டு வருபவர் நடிகர் விஜய். தற்போது கோட் படத்தில் பிசியாக நடித்த வரும் விஜய் அடுத்ததாக எச் வினோத்துடன் தனது 69 ஆவது படத்தில் இணைகிறார். இந்த இரு படங்களுக்கு பிறகு நேராக அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறார். அதனால் இந்த இரு படங்களுக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகுவதாக விஜய் அறிவித்திருக்கிறார்.

அதனால் கோட் மற்றும் எச் வினோத்தின் ஆகிய படங்களின் மேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பல நல்ல நல்ல படங்களை திரையுலகியிருக்கு கொடுத்த விஜய் இன்று வரை ஒரு டாப் ஸ்டார் ஆகவே இருந்து வருகிறார். எம்ஜிஆர், ரஜினி இவர்கள் வரிசையில் அடுத்ததாக விஜய் தான் ஒரு மாஸ் ஹீரோவாக ஸ்டைலிஷ் ஆன ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் அதிக வசூலை அள்ளிய முதல் படம் இதுதான்!… அப்பவே இவ்வளவு தொகையா?..

இந்த நிலையில் நடிகர் விஜய் பற்றி சத்யராஜ் முன்பு ஒரு பேட்டியில் கூறியது என்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. சத்தியராஜும் விஜய்யும் முதன்முதலாக இணைந்த திரைப்படமாக நண்பன் திரைப்படம் அமைந்தது. அந்த படத்தின் விழா பிரமோஷன்களில் கலந்து கொண்ட போது சத்யராஜ் சில சுவாரசியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது நடிகர்களிலேயே நன்கு நடிக்கக்கூடிய நடிகர்கள் என்றால் அது அமீர் கான் மட்டுமே. ஆனால் அமீர் கானையும் விட அதிக அளவு நான் விஜயை தான் ரசித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ஹீரோக்களுக்கு என ஒரு க்யூட்னஸ் இருக்கும். அந்த க்யூட்னஸ் விஜய் இடம் மட்டும் தான் இருக்கிறது. பார்த்தாலே அவருடைய கன்னத்தை கிள்ளுவது போல தோன்றும். அது முதலில் எம்ஜிஆர் இடம்தான் நான் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு விஜயிடம் தான் அந்த க்யூட்னஸ் இருக்கிறது என சத்யராஜ் அந்த ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: எனக்கே ஸ்கெட்ச்சா? தளபதியை ஓவர் டேக் செய்த ரஜினிகாந்த்… கூலி படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Published by
Rohini