‘வடசென்னை 2’க்கு வச்சாரே மொத்தமா ஒரு ஆப்பு! உளறிய சீமான்.. வசமாக மாட்டிக் கொண்ட வெற்றிமாறன்

Vadachennai Movie: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற படம் வடசென்னை. வடசென்னை பகுதியில் வாழும் மக்களின் 35 ஆண்டுகால வாழ்வியலை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை எடுத்திருப்பார் வெற்றிமாறன். இதில் தனுஷ் கேரம் விளையாட்டு வீரராக நடித்திருப்பார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் , தனுஷின் உண்டார்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனி கிராஸ்ரூட் பிலிம் பேக்டரி நிறுவனம் சேர்ந்து தயாரித்தது.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். 2012 ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 2018 ஆம் ஆண்டுதான் படம் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றது. படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: நான் பாடின முதல் தமிழ் பாட்டு அதுதான்!. ஆனா படமே டிராப் ஆயிடுச்சி!.. சோகத்துடன் சொன்ன எஸ்.பி.பி..

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும். வெற்றிக்கூட்டணியாகவே அவர்கள் இன்றுவரை பயணம் செய்து வருகிறார்கள். அதனால் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் வரும் என தனுஷும் சரி வெற்றிமாறனும் சரி சொல்லிக் கொண்டு வர இன்று ஒரு சம்பவம் அதற்கு எதிராக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தை கொண்டாடிய ஒரு யுடியூப் சேனல் அந்த விழாவிற்கு வெற்றிமாறன் , சூரி, சீமான் ஆகியோர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் பேசிய சீமான் விடுதலை படத்தை பற்றி மிகவும் பெருமையாக பேசினார். சூரியின் நடிப்பையும் பாராட்டி பேசினார். அஜித் , விஜய் அளவுக்கு இப்போது சூரியின் மார்கெட்டும் உயர்ந்து விட்டதாக கூறினார்.

இதையும் படிங்க: அதுல நான் நடிக்க கூடாதுனு பெரிய எதிர்ப்பு! அதையும் மீறி ஹிட் கொடுத்த ஸ்ரீகாந்த்.. என்ன படம் தெரியுமா?

இப்படி பேசிக் கொண்டிருந்த போது ‘தம்பி வெற்றிமாறன் வடசென்னை 2 வரும்னு சொல்லி ஏமாத்திட்டான். ஆனால் விடுதலை படத்தில் அவனால் அப்படி எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் விடுதலை முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியையும் காட்டியதால் கண்டிப்பாக இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். அதனால்தான் இரண்டாம் பாகம் வருகிறது’ என்று சொன்னதும் ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

ஏனெனில் வடசென்னை 2 படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க சீமான் வடசென்னை 2 வரும்னு வெற்றிமாறன் ஏமாத்திட்டானு சொன்னதும் ரசிகர்க்ள் பயந்து அரங்கத்தில் கத்த ஆரம்பித்தனர். அதன் பிறகு வெற்றிமாறன் மைக்கை பிடித்து அமைதியாக இருங்கள் என சொன்னபிறகே ரசிகர்கள் அமைதியானார்கள்.

இதையும் படிங்க: ‘தல’ங்கிற பேர் யாருக்கு வரவேண்டியது தெரியுமா? அசால்ட்டா தட்டி தூக்கிய அஜித்.. இது தெரியாம போச்சே

 

Related Articles

Next Story