Connect with us

விஜய் குறித்து சீமான் இப்படி படக்குன்னு சொல்லிப்புட்டாரே… அப்போ வின்னர் யாரு?

seeman, vijay

latest news

விஜய் குறித்து சீமான் இப்படி படக்குன்னு சொல்லிப்புட்டாரே… அப்போ வின்னர் யாரு?

நாம் தமிழர் கட்சியினை செம்மையாக வழிநடத்திக் கொண்டு இருக்கும் தலைவர் சீமான் பேச்சு இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுவது இயல்பாக இருக்கிறது. நேர்மை, நியாயம், உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை என அனைத்து அம்சங்களும் கலந்த கலவையாக இருப்பதால் இளம் வாக்காளர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதே போல தமிழக வெற்றிக் கழகத்தை வீறு நடைபோட்டு நடத்திக் கொண்டு இருக்கும் விஜயின் பேச்சும் மக்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டு வருகிறது. திராவிட கட்சிகளை முற்றிலும் நீக்க வேண்டும்.

புது ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கில் தான் இவர்கள் களம் இறங்கியுள்ளனர். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களது பேச்சில் தெரிகிறது. சீமான், விஜய் இருவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சீமான் விஜயை தம்பி என வார்த்தைக்கு வார்த்தை அழைக்கிறார். விஜய் குறித்து இவர் வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.

அவர் முதன் முதலாக தேர்தலை எதிர்கொள்கிறார். இதுல யாரு வந்தா சிறப்பா இருக்கும்கறதை என் அன்பு மக்கள் தான் முடிவு பண்ணனும். அய்யா ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துட்டீங்க. ஐயா எடப்பாடிக்கு நாலரை ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்துட்டீங்க. இதுல இருக்குறது நானும் என் தம்பியும்தான் இருக்கோம்.

எங்கள்ல யாருக்காவது நீங்க வாய்ப்பு கொடுக்க முயற்சிக்கணும். எல்லாரது ஆட்சியிலும் வாழ்ந்து பார்த்துட்டீங்க. அஞ்சு ஆண்டு எங்க ஆட்சியிலும்தான் வாழ்ந்து பாருங்களேன். ஏற்கனவே இந்த ஆட்சி நல்லாருக்கு. தொடரணும்னு வாய்ப்பு அளிச்சீங்கன்னா அதை வரவேற்போம். அதை ஒண்ணும் பண்ண முடியாது.

இல்ல இதை மாத்தணும்னு நினைச்சீங்கன்னா வாய்ப்பா நானும் என் தம்பியும் தான் இருக்கோம். அதுல நீங்க எங்களில் தான் யாராவது ஒருத்தரை தேர்வு செய்யணும். அவர் வெற்றி எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என் வெற்றியும் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஏன்னா நாங்க வந்து இதுவரைக்கும் இருந்த ஆட்சி அளவுக்கு கேவலமாக ஆட்சி செய்ற பிள்ளைகள் அல்ல. இதை விட ஆகச்சிறந்த ஆட்சியைக் கொடுக்கணும்னு ஒரு கனவோடு இருக்கிற பிள்ளைகள். அதுல எது சரியா இருக்கோ அதை நீங்களே முடிவு எடுங்க என்கிறார் சீமான். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. வின்னர் யாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

To Top