More
Categories: Entertainment News latest news

செய்திவாசிப்பாளர் கண்மணிக்கும் சீரியல் நடிகர் நவீனுக்கும் திருமணம்.. மணக்கோலத்தில் இருவரும் எப்படி இருக்காங்க பாருங்க!

சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வந்த கண்மணி மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் ஹீரோவாக நடித்த நவீன் இருவருக்கும் இன்று சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

நேற்றிரவு சீரும் சிறப்பாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெரூன் கலர் கோட்டில் செம ஹேண்ட்ஸமாக நவீனும் பிங்க் கலர் லெஹங்காவில் கண்மணியும் மேடையை அலங்கரிக்க சின்னத்திரை பிரபலங்களும் வெள்ளித்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertising
Advertising

நேற்று காலை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக மகாபலிபுரம் ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு செய்திவாசிப்பாளர் கண்மணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்றும் இன்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால், தொடர்ந்து பிரபலங்களின் திருமணம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை சிகப்பு நிற பட்டுப்புடவையை அணிந்து கொண்டு மணமேடையில் மணப்பெண்ணாக அமர்ந்திருந்த கண்மணி கழுத்தில் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டிருந்த மணமகன் நவீன் தாலி கட்டினார்.

நவீன் தாலி கட்டியதும் அதனை தொட்டுப் பார்த்து சந்தோஷத்தில் கண்மணி கண் கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்மணி மற்றும் நவீன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில மாதங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் நவீன் போஸ்ட் போட்டிருந்தார். அந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் இருவரும் எப்போ காதல் செய்ய ஆரம்பித்தீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால், இது, காதல் திருமணம் இல்லை என்றும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி இருந்தனர்.

கண்மணி மற்றும் நவீன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களில் அவர்களது திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
Saranya M