latest news
அவன் இறந்தப்போ இதுதான் ஹெல்ப் பண்ணுச்சு!.. ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகையின் தற்போதைய நிலை
Actress Sruthi Shanmuga Priya: நாதஸ்வரம் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சுருதி சண்முகப்பிரியா. அதுமட்டுமில்லாமல் வாணி ராணி சீரியல் , விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றவர்.
அழகான தோற்றம், நல்ல நிறம் என பார்த்ததும் பிடிக்கும் முக அமைப்பை கொண்டவர் சுருதி சண்முகப்பிரியா. இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து ஒரு வருட காலம்தான் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார். அதற்குள் மரணம் அரவிந்த்தை தேடிச் சென்றது. உடற்பயிற்சி நிலையத்தில் அரவிந்த் வழக்கம் போல வொர்க் அவுட் செய்யும் போது மயங்கியதாகவும் அதன் பிறகே அவர் இறந்ததாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க : பிரிந்திருந்த சிவாஜி – கண்ணதாசனை சேர்த்து வைக்க இயக்குனர் செஞ்ச வேலை!.. நடந்தது இதுதான்..
இந்த நிலையில் அரவிந்தின் மரணத்திற்கு பிறகு முதன் முறையாக சுருதி சண்முகப்பிரியா மீடியா முன் தோன்றி பேட்டி கொடுத்து வருகிறார். அவர் இப்போது எங்கு சென்றாலும் அரவிந்துடன் இருக்கும் ஒரு சிறிய அளவிலான புகைப்படத்தை தன் கையோடு எடுத்து செல்கிறாராம். அவர் உடம்பு இல்லையென்றாலும் அவரின் ஆன்மா தன்னை சுற்றியே இருப்பதாக நினைத்து அந்த போட்டோவை எடுத்துச் செல்கிறேன் என்று கூறியிருந்தார்.
அவர் இறந்த சமயத்தில் பல வதந்திகள் வந்தன. அதை நிறுத்தவே அரவிந்த் இறந்து இரண்டாம் நாளே நான் ஒரு வீடியோ போஸ்ட் பண்ணியிருந்தேன் என்றும் சுருதி கூறினார். அதாவது உங்களுக்கு என்ன மாதிரியான லைஃப் ஸ்டைல் பிடிக்குதோ அதன் படியே வாழுங்கள். தேவையில்லாமல் ஒருவர் மரணத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டாம் என்றும் சுருதி கூறினார்.
இதையும் படிங்க: வடிவேலு இல்ல.. பொடிவேலு!.. இவ்ளோ வன்மம் இருக்க கூடாது.. பொளந்து கட்டிய இயக்குனர்
அதுமட்டுமில்லாமல் அவர் இறந்த சமயம் எனக்கு மிகவும் உதவியது யோகாவும் தியானமும்தான். நிறைய புத்தகங்களை படிக்கிறேன். நிறைய இடங்களுக்கு டிராவல் செய்கிறேன். என்னால் மற்றவர்களுக்கு எதிர்மறையான உணர்வுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அரவிந்த் என்னிடம் நிறைய நேர்மறையான கருத்துக்களையே விட்டு சென்றிருக்கிறார். அதை மட்டுமே எடுத்து நான் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றும் சுருதி கூறினார்.