Connect with us
actress shakila

Entertainment News

அந்த விஷயத்துக்கு மட்டும் நா வெக்கபடவே மாட்டேன்… இவங்கதான் பிக்பாஸுக்கே தேவை… ஷகிலாவின் பளிச் டாக்…

மக்களின் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடப்பது இயல்பே. அவை அனைத்தும் பார்ப்பவர்களுக்கு சற்று மன ஆறுதலை தரும்படி இருக்கும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பப்படுறது.

இதில் பங்கேற்க்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் அந்த வீட்டில் இருக்க வேண்டும். வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல், பிக்பாஸ் கொடுக்கும் தினசரி டாஸ்க்குகளை செய்து கொண்டும் அதே சமயம் போட்டியை விறுவிறுப்புடனும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு செய்து எவர் ஒருவர் கடைசி வரை வீட்டில் நிலைத்து நிற்கிராரோ அவரே வெற்றி பெற்றவராய் அறிவிக்கப்படுவார். அவருக்கென குறிப்பிட்ட பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இதையும் வாசிங்க:வேலியில போற ஓணான இழுத்து வேட்டிக்குள்ள விட்ட கதையால இருக்கு… சும்மா இருந்த நெக்சனை வம்புக்கு இழுத்த பிரதீப்!…

கன்னட பிக்பாஸில் கலந்து கொண்டவர்தான் நடிகை ஷகிலா. இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. இவர் பிக்பாஸில் கலந்து கொண்டபொழுது ஒரு நாளைக்கு 10 சிகரெட் இவருக்கு கொடுப்பார்களாம். ஆனால் இவர் பிக்பாஸுக்கு வெளியே உபயோகிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையை விட இது குறைவுதான் என அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும் இவரின் 10 சிகரெட்டுகளில் 3 அங்குள்ள போட்டியாளர்கள் வாங்கிவிடுவார்களாம். அதனால் இவர் சிகரெட் பிடிப்பதை பிக்பாஸில் குறைத்து கொண்டதாகவும் மேலும் தான் சிகரெட் பிடிப்பேன் என்பதை கூற ஒரு நாளும் வெட்கப்பட்டதில்லை எனவும் கூறுகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும் எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் கூட ஏதோ ஒரு பழக்கம் இருக்கும், அதைபோலதான் எனக்கும் சிகரெட் பிடிப்பது மிகவும் பிடிக்கும் என கூறுகிறார்.

இதையும் வாசிங்க:நடிக்கிறதை விட்டுட்டு இந்த தொழில் செய்யப் போறாரா வலிமை பட நடிகை?.. அவரே போட்ட போஸ்ட்டை பாருங்க!..

சிகரெட்தான் என்னுடைய நண்பன். என் கூடவே 30 ஆண்டுகளாய் கம்பெனி கொடுப்பது இந்த சிகரெட்தான் எனவும் குறிப்பிட்டார். மேலும் பிக்பாஸுக்கு வரும் போட்டியாளர்களிடையெ விறுவிறுப்பு சற்று குறைவானாலும் கூட அவர்களை வெளியே அனுப்பிவிடுவர் எனவும் அதை தாண்டி நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகப்படுத்தும் போட்டியாளர்களையே உள்ளே இருக்கவிடுவர் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் தமிழ் பிக்பாஸில் இந்த சீசனில் கலந்து கொண்டவர்கள் ஒருசில பேர்தான் தனக்கு தெரியும் எனவும் மற்றவர்கள் யாரென்றே தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார். அதனால் இந்த சீசன் சற்று சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:ஷூட்டிங் வந்த இடத்துல காதலுடன் கசமுசா!.. கடுப்பான பிரபல நடிகர்.. ஹீரோயினையே மாத்த இதுதான் காரணமா?..

google news
Continue Reading

More in Entertainment News

To Top