அப்போது ஷங்கரிடம் கெஞ்சிய விஜய்.! இப்போது ஷங்கரையே பொறாமைபட வைத்த விஜய்.!?

சினிமா உலகம் எப்போதும் அதிசயங்கள் நிறைந்தது. இங்கு யார் உச்சத்திற்கு செல்வார்கள். உச்சத்திலிருந்த யார் கீழே வருவார்கள் என்று ரசிகர்களால் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு பிடித்திருந்தால்,அவர்கள் அதற்காக கடுமையாக உழைத்திருந்தால் அது யாராக இருந்தாலும் உச்சத்துக்கு கொண்டு சேர்த்து விடுவார்கள்.

அப்படி ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் அதாவது நண்பன் படம் ரிலீஸ் ஆன சமயம், ஒரு மேடையில் ஷங்கர் இருக்கும்போது அவரிடம் தளபதி விஜய் ஒரு கோரிக்கை வெளிப்படையாக கூறினார். ' சார் நான் உங்கள் இயக்கத்தில்நண்பன் படத்தில் நடித்துவிட்டேன். அது ரீமேக் படம். விரைவில் உங்கள் ஸ்டைலில் பிரம்மாண்டமாக உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஆசை, ஐயம் வெயிட்டிங் .' என கூறியிருப்பார் தளபதி விஜய். அதை பார்த்து தலையசைத்துவிட்டு சென்று விடுவார் ஷங்கர்.

தற்போது தளபதி விஜயின் 66வது திரைப்படம் மற்றும் இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கி வரும் திரைப்படம் இந்த இரண்டு படங்களையும் பிரம்மாண்டமாக தில் ராஜு தான் தயாரித்து வருகிறார்.

இதில் ஷங்கர் படத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கிறதாம். ஒரு மாதத்தில் 15 நாட்கள்தான் படப்பிடிப்பு நடக்கிறதாம். மற்ற தினங்களில் படத்திற்கான மற்ற வேலைகள் தான் நடக்கிறதாம். ஒரே மூச்சாக படத்தை சூட் செய்து முடித்துவிடலாம் என்று இருந்த ஷங்கருக்கு, தற்போது படத்தின் சூட்டிங் இழுத்துக்கொண்டே செல்வதால் சற்று வருத்தத்தில் இருக்கிறாராம்.

இதையும் படியுங்களேன் - விஜய் கதைய முடிச்சாச்சு., அடுத்த குறி அஜித் தான்.! இணையத்தை அலறவிட்ட சிறுத்தை கார்த்தி.!

ஆனால், தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே சென்னையில் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து, தற்போது ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாம். விரைவில் அடுத்த கட்ட சூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

முன்பு ஷங்கரிடம் வாய்ப்பு கேட்டுருந்த விஜய், தற்போது அவரே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்திற்கு சென்று விட்டார் என்பது நிதர்சனமான உண்மை.

 

Related Articles

Next Story