ஹாலிவுட் இயக்குநர்களுடன் ஒன் டு ஒன் மோத ரெடியான ஷங்கர்!.. அடுத்தடுத்து அவரிடம் இருக்கும் 3 சரக்கு?

ஷங்கர் இயக்கத்தில் இந்த மாதம் ஜூலை 12-ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் பல வருட காத்திருப்புக்கு பிறகு ஒருவழியாக ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தை தொடர்ந்து இந்தியன் 3 திரைப்படத்தையும் வெளியிட ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படமும் விரைவில் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிரபாஸை பார்த்து விஜய் கத்துக்கணும்!.. கல்கி படத்துக்காக ரெபல் ஸ்டார் பண்ணது என்ன தெரியுமா?..

அடுத்ததாக ஷங்கர் வேள்பாரி எனும் பீரியட் படத்தை எடுத்து ராஜமௌலிக்கு டஃப் கொடுப்பார் என தெரிகிறது. சமீபத்தில் இது தொடர்பாக ரசிகர்களை சந்தித்து பேசிய ஷங்கர், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அடுத்ததாக தன் கைவசம் மூன்று பெரிய படங்கள் உள்ளன என்றார்.

ஹிஸ்டாரிக் பேஸ்ட் பீரியட் படம் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் டைப் படம், கடைசியாக 2012 எனும் பெயரில் வந்த உலகமே அழியும் விதமான ஒரு சயின்ஸ்ஃபிக்‌ஷன் படங்களின் கதைகள் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சுனைனாவின் ‘மாப்பிள்ளை’ இவர்தான்… புலம்பும் ரசிகர்கள்!

இந்த மூன்று படங்களுக்கும் பெரிய பட்ஜெட் மற்றும் விஎஃப்எக்ஸ் உள்ளிட்டவை அதிகம் தேவைப்படுவதாகவும். அந்த படங்கள் வெளியானால் நேற்றில் மிகப்பெரிய அளவில் இந்திய சினிமா வளர்ச்சி அடையும் என்றும் கூறியுள்ளார்.

ஷங்கர் அடுத்ததாக வேள்பாரி படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமா நடிகர்களை ஹீரோவாக ஆக்குவாரா? அல்லது மற்ற மொழி நடிகர்களை வேள்பாரியாக ஷங்கர் மாற்றுவாரா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.

இதையும் படிங்க: இந்த ரெண்டு படமும் வரட்டும்!.. சிவகார்த்திகேயன் ரேஞ்சே வேற!. ஸ்கெட்ச் போட்டு வேலை பாக்கும் எஸ்.கே..

 

Related Articles

Next Story