ஷங்கருக்கே நோ சொன்ன சித்தார்த்… டாப் இயக்குனர் சொன்ன ஐடியாவால் தடம் புரண்ட சினிமா வாழ்க்கை!

Siddharth: தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த் சில படங்களில் நடித்திருந்தால் கூட அவரின் சினிமா தேர்வு ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. எல்லா படங்களையுமே இதுவரை சரியாக ரசிகர்களிடம் எடுத்து சென்று இருக்கிறார் என்றே கூற வேண்டும்.

சினிமா இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் கோலிவுட் பக்கம் வந்தவர் சித்தார்த். பி.சி.ஸ்ரீராம் சிபாரிசு செய்ததால் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அவருக்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இப்படி ஆகணும்னு நினைச்சேன்.. வடிவேலு கூட சேர்ந்து தப்பு பண்ணிட்டேன்!… புலம்பும் காமெடி நடிகர்…

இந்த படத்தின் திரைக்கதையை எழுதிய சுஜாதாவும், ஷங்கருடன் ஒரு படத்தில் கமிட்டானார். அப்போது தான் ஷங்கர் பாய்ஸ் படத்துக்கு முன்னா கேரக்டர் தேர்வு நடத்தி வந்தார். ஆனால் அவருக்கு பொருத்தமான ஆள் கிடைக்காமல் இருந்ததாம்.

சுஜாதா தான் ஷங்கரிடம் மணிரத்னம் ஆபிஷில் வேலை செய்யும் சித்தார்த் முன்னாவாக பொருத்தமாக இருப்பான் எனக் கூறி இருக்கிறார். சித்தார்த்தை அழைத்த போது அவர் எனக்கு படம் இயக்கவே ஆசை என மறுத்துவிட்டாராம். ஆனால் மணிரத்னம் சித்தார்த்தை தனது அறைக்கு அழைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்த படமாவது ஹிட் அடிக்குமா?.. மேடையில் கண் கலங்கிய சித்தார்த்!.. என்ன சொன்னார் தெரியுமா?,,

ஏன் வேணாம் என்ற என சித்தார்த்தை மணிரத்னம் கேட்டாராம். இல்லை எனக்கு பயமா இருக்கு சார் என்றாராம். ஆனால் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் கற்றுக்கொள். ஷங்கர் மாதிரியான பெரிய இயக்குனருடன் ஒரு வருடத்துக்கும் மேல் பணியாற்றுவது யாருக்கு கிடைக்கும்?

இப்படி மணிரத்னம் சொன்ன வார்த்தைகளை அப்படியே பின்பற்றிய சித்தார்த் பாய்ஸ் படத்துக்கு ஓகே சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து இயக்குனராக வேண்டும் என்ற அவர் ஆசை தடம் புரண்டது. கோலிவுட்டில் நடிகராக சொல்லிக்கொள்ளும் இடத்தினை பிடித்து விட்டார்.

 

Related Articles

Next Story