
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சிம்பு. அதிக ரசிகர்களை கொண்டிருந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அதாவது தொடர்ந்து படங்களை நடிக்காமல் இருப்பவர் சிம்பு. சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் தொடக்கம் முதல் எல்லாமே பிரச்சனைதான். ஒன்று அந்த பிரச்சனைக்கு சிம்பு காரணமாக இருப்பார்.. இல்லையென்றால் வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்சனை வரும்.. அது சிம்புவின் ராசி..
பத்துதலை படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்துதான் அவரின் தக் லைப் படம் வெளியானது. தக் லைப் படம் வெளியாகி பல மாதங்கள் கழித்துதான் வெற்றிமாறனின் அரசன் படத்தில் நடிக்க தொடங்கினார் சிம்பு. முதற்கட்டப்படிப்போடு அந்த படத்தின் வேலை அப்படியே நின்று விட்டது. அடுத்தக்கட்டபிடிப்பு எப்போது துவங்கும் என தெரியவில்லை.
தற்போது சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். பெரும்பாலும் துபாய், லண்டன் என மாறிமாறி பயணிக்கிறாராம். ஒருபக்கம் கமல் வெளிநாடு சென்று AI கற்றுக் கொண்டது போல சிம்புவும் AI கற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. மேலும் அங்கிருந்துவாறே தன்னிடம் கதை சொல்ல விரும்புவர்களிடம் வீடியோ காலில் கதை கேட்கிறாராம்..