Connect with us
simbu

Cinema History

10வது படிக்கும்போதே லவ் ஃபெயிலரான சிம்பு!. அட இப்ப வரைக்கும் அது ரிப்பீட்டு!..

Actor STR: தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சையில் சிக்கிய நடிகர் என்றால் அது சிம்பு மட்டுமே. தந்தை டி.ராஜேந்திரால் சிறுவனாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். மகன் சிம்புவுக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற படத்தை அப்போதே கொடுத்தார் டி.ஆர். சிறுவனனாக இருக்கும்போதே ஹிட் படங்களை கொடுத்தார் சிம்பு.

ஆனால், டீன் ஏஜுக்கு பின் அவர் சினிமாவில் நடிக்க துவங்கியது முதல் இப்போது வரை அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருக்கிறது. சிம்பு என்றால் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். தாமதாக வருவார். இவரால் படம் எடுத்து முடிப்பது தாமதமாகும். சம்பள விஷயத்தில் தயாரிப்பாளருடன் சண்டை போடுவார். குறிப்பாக டி.ஆரின் அப்பா – அம்மா இருவரும் சிம்பு பட தயாரிப்பாளர்களுக்கு குடைச்சலை கொடுப்பார்கள்.

இதையும் படிங்க: நடிகைகள் மட்டுமா? சிம்புவை நம்பி தெருவில் நின்னவங்க பல பேரு!.. அட இத்தனை பேரா?…

இப்படி பல புகார்கள் சிம்பு மீது இருக்கிறது. இதையெல்லாம் தாண்டியும் சிம்பு அவ்வப்போது ஹிட் படத்தை கொடுத்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார். குறிப்பாக சிம்புவின் காதல் வாழ்க்கை எல்லாமே தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. நயன்தாராவை காதலித்தார்.

இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் வெளியானது. ஆனால், அது பிரேக்கப்பில் முடிந்தது. அதற்கு முன்பே ஒரு நடிகரின் மகளுக்கும், அவருக்கும் காதல் இருந்ததாகவும் அதுவும் பிரேக்கப் ஆனதாக சொல்லப்பட்டது. அதன்பின் ஹன்சிகாவுடன் நடித்த போது இருவருக்கும் காதல் உண்டானது. சில மாதங்களில் அதுவும் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: அனிருத் இல்லைனா படம் ஓடாதா? பேன் இந்திய அளவில் இசையமைப்பாளரை இறக்கிய சிம்பு..

ஈஸ்வரன் படத்தில் நடித்த போது நித்தி அகர்வாலுடனும், வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தபோது சித்தி அட்னானியுடனும் சிம்புவுக்கு காதல் வந்ததாக செய்திகள் கசிந்தது. ஆனால், இதுவெல்லாம் உண்மை என்பது சிம்புவுக்கே வெளிச்சம். இந்நிலையில், 10 வயதிலேயே சிம்பு சந்தித்த காதல் தோல்வி பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

சிம்புவின் பள்ளி நாட்களில் அவரின் அம்மா மிகவும் ஸ்ட்ரிக்டாக இருப்பாராம். வீட்டை விட்டே சிம்புவை வெளியே அனுப்ப மாட்டார்களாம். சாந்தோம் ஸ்கூலில் சிம்பு 10வது படித்துக்கொண்டிருந்த போது பக்கத்து பள்ளியில் பிளஸ் டூ படித்து கொண்டிருந்த ஒரு பெண் சிம்புவிடம் நட்பாக பழகியுள்ளார். அந்த பெண் ஒருமுறை அவரின் ஸ்கூல் கல்ச்சுரல் நிகழ்ச்சிக்கு சிம்புவை அழைத்திருக்கிறார். ஆசையுடன் சென்ற சிம்விடம் ‘இவர்தான் என் பாஃய் பிரண்ட் என ஒருவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இதைப்பார்த்து அப்பு கமல் போல கண்ணீர் விட்டாராம் சிம்பு.

இப்போதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே சிம்பு வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ச்ச! இப்படி ஒரு ஆசையில் இருந்திருக்காரே! நிறைவேறா ஆசையில் நம்மை விட்டுச் சென்ற எஸ்.பி.பி

google news
Continue Reading

More in Cinema History

To Top