ajith

திரையுலகில் நடிகர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா என பல அவதாரங்கள் எடுத்தவர் சிங்கம் புலி. இயக்குனர் பாலாவுக்கு நெருக்கமானவர் இவர். பாலா இயக்கிய பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் இணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். நான் கடவுள் படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதன் பின் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மிளகாய், தூங்கா நகரம், முத்துக்கு முத்தாக, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களிலும் சிங்கம் புலி நடித்திருக்கிறார்.

தேசிங்கு ராஜா படத்தில் இவர் ஒரு திருமண பந்தியில் சாப்பிடும் காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அவர் ‘பாயாசம் எங்கடா’ என்று கேட்கும் அந்த காட்சி தொடர்பான புகைப்படத்தை இப்போதும் பலரும் மீம்சில் பயன்படுத்துகிறார்கள். அஜித் நடிப்பில் வெளியான ரெட் திரைப்படத்தை ராம் சத்யா என்கிற பெயரில் இயக்கியவர் இவர்தான்.

Singampuli
Singampuli

அதன் பின் சூர்யா, ஜோதிகாவை வைத்து மாயாவி என்கிற படத்தையும் சிங்கம் புலி இயக்கினார்.. அதன்பின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்திலும் நெகட்டிவ் வ்ஏடத்தில் நடித்து பலரின் கோபத்திற்கும் ஆளானார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள தாய் கிழவி படத்தின் ராதிகாவின் மகன்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிங்கம் புலி ‘தாய் கிழவி படத்தைப் பொறுத்தவரை நான் இயக்குரிடம் கதை கூட கேட்கவில்லை.. கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது.. சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்பது மட்டும்தான் தெரியும். நான் ஏன் கதையை கேட்கவில்லை என்றால் அஜித் சாரை வைத்து ரெட் படத்தை இயக்கியபோது கிட்டத்தட்ட 600 பேரிடம் கதை சொல்லியிருப்பேன். அங்க போய் சொல்லு.. இங்க போய் சொல்லு என்று கடைசியில் பூசாரி வரைக்கும் கதை சொன்னேன்.. படம் முடியு|றதுக்குள்ள எனக்கே கதையை மறந்து போயிடுச்சி.. அந்த நேரத்தில் நான் பட்ட பாடு இருக்கே… ஐயோ’ என ஜாலியாக பேசியிருக்கிறார்.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.