சிங்கப்பெண்ணே: இந்த நிலைக்குக் காரணமானவனைக் கண்டுபிடித்தே தீருவேன்… சபதம் போடும் அனந்தி

by sankaran v |   ( Updated:2025-04-30 11:11:51  )
singappennea anpu aanandhi
X

singappennea anpu aanandhi

சிங்கப்பெண்ணே தொடரில் இன்று நடந்த சம்பவங்களின் தொகுப்பைக் காணலாம். ஆனந்தியின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள அன்பு சௌந்தர்யாவை ஆனந்தியின் ரூமில் தங்க வைக்கிறான். அந்த நிலையில் ஆனந்திக்கு திடீர் என தலைசுற்றல், கால் வலி வருகிறது. அதற்காக ரெஜினா மாத்திரை வாங்க வேண்டும் என ஆனந்தியை பரிசோதித்த டாக்டருக்கு போன் பண்ணுகிறாள்.

மருத்துவர் சொல்லும் மாத்திரையை எழுதி மெடிக்கலுக்குச் செல்லத் தயாராகிறாள். அந்த நேரம் பார்த்து சௌந்தர்யா அந்த மாத்திரையை நான் வாங்கி வாரேன்னு சீட்டைப் பிடுங்கிவிட்டுப் போகிறாள். அங்கு மெடிக்கல் கடைக்காரன் இது கர்ப்பத்துக்கு உள்ள மாத்திரை என சொல்லி விட அங்கு வம்பு இழுக்கிறாள் சௌந்தர்யா. அப்புறம் ரெஜினா வந்து ஒருவழியாக அவளை சமாதானம் செய்து மாத்திரையை வாங்கி வருகிறாள்.

இருந்தாலும் சௌந்தர்யாவிடம் நான்தான் தவறாக மாத்திரையின் பெயரை எழுதி விட்டேன் என சொல்லி சமாளித்து விடுகிறாள். இதற்கிடையில் மகேஷை உயிருக்கு உயிராக மித்ரா காதலிப்பதாகவும் அதனால் அவளைக் கல்யாணம் செய்து கொள் என்றும் அவனது பெற்றோர் சொல்கின்றனர். இது மகேஷூக்கு ஆச்சரியத்தைத் தருவதோடு உடனே அதை மறுத்தும் விடுகிறான். எனக்கு மித்ரா நல்ல ப்ரண்டுதான். லவ் பண்ற ஃபீலிங்கே வராது என்கிறான்.

மித்ராவோ மனமுடைந்து தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும் அப்படி காதலிக்காவிட்டால் செத்துப் போய்விடுவேன் என்றும் மகேஷிடம் சொல்லி அழுகிறாள். இதனால் மகேஷ் செய்வதறியாது தவிக்கிறான். இதற்கிடையில் சௌந்தர்யா அன்புவிடம் போன் பண்ணி ஆனந்தியின் உடல்நிலையைப் பற்றியும், மாத்திரை வாங்கிய சம்பவத்தையும் எடுத்துச் சொல்லி விடுகிறாள். அன்பு ஆனந்திக்கு போன் பண்ணி நாம ஆஸ்பத்திரியில போய் செக்கப் பண்ணுவோம் என்கிறான்.

இதனால் ஆனந்தி பயந்து எனக்கு ஒண்ணுமே இல்லை. மாத்திரை போட்டதுமே சரியாகி விட்டது என்கிறாள். அன்புவோ இவளை ஆஸ்பத்திரிக்குன்னு நேரடியா கூப்பிட்டா வரமாட்டாள். அதனால் கம்பெனிக்குப் போவோம்னு சொல்லி அழைச்சிட்டுப் போகலாம்னு நினைக்கிறான். அதனால் கம்பெனிக்குப் போலாம்னு சொல்கிறான். அதற்கும் பிடிகொடுக்காமல் என்னை காயத்ரி அழைச்சிட்டுப் போறேன்னு சொல்கிறாள்.

இந்தநிலையில் அன்புவின் அம்மாவுக்கு காய்ச்சல் வந்து விட, கஞ்சி காய்ச்சிக் கொடுக்கச் செல்கிறான் அன்பு. இந்த நிலையில் ரெஜினா ஆனந்தியிடம் 'நீ இந்த நிலையில் இருக்கும்போது கம்பெனிக்குப் போய்த்தான் ஆகணுமா?'ன்னு கேட்கிறாள். 'என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் கண்டிப்பா கம்பெனில தான் இருக்கான். அவன் யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன். அதுக்காகவே கம்பெனிக்குப் போகணும்'னு சொல்கிறாள் ஆனந்தி. அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.

Next Story