சிங்கப்பெண்ணே: அன்புவுக்குத் தெரிந்தது ஆனந்தியின் தப்பு… வசமாக சிக்குவாளா மித்ரா?

singappennea anpu, aananthi
சிங்கப்பெண்ணே சீரியலில் மித்ரா கையில் தடயம் சிக்க, ஆனந்தி அதைத் தேடித் தேடி அலைகிறாள். மனம் உடைந்து போய் தோழிகளுடன் நிற்கிறாள். இனி என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.
ஆனந்தி தன் கர்ப்பத்துக்குக் காரணமானவன் யார் என்று ரெஸ்டாரண்ட் வரை போய்த் தேடிப் பார்த்து விட்டு வந்து விட்டாள். எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அதற்காக தோழிகளுடன் கலந்து ஆலோசிக்கிறாள். அப்போது அந்த ரெஸ்டாரண்ட் மேனேஜர் மேல் தான் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தன்னிடம் எதையோ மறைப்பதாகவும் கூறுகிறாள்.
அதே நேரம் இவர்கள் ஹாஸ்டலில் பேசிக்கொண்டு இருப்பதை மித்ரா ஒட்டுக் கேட்டு விடுகிறாள். அதை காயத்ரி பார்த்து விட ஆனந்தியும் திரும்பி பார்க்கிறாள். மூவரும் வெளியே வந்து மித்ராவிடம் என்னன்னு விவரம் கேட்கிறார்கள். அப்போது நீங்க ரெஸ்டாரெண்ட்டைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தீங்க. அதான் எதாவது உதவி செய்யலாமேன்னுதான் பார்க்க வந்தேன் என்று சமாளிக்கிறாள் மித்ரா.
அதன்பிறகு தனது அறையில் சென்று ரெஸ்டாரெண்டில் பணம் கொடுத்து வாங்கி வைத்த அந்த தடயமான பென்டிரைவை லேப்டாப்பில் போட்டுப் பார்க்கிறாள். அதில் ஆனந்தி தள்ளாடித் தள்ளாடி வருவதும் மித்ரா அவளைக் கைத்தாங்கலாக அழைத்து வருவதுமாக காட்சி வருகிறது. அதைப் பார்த்ததும் இது மட்டும் ஆனந்தியின் கைக்கு கிடைத்தால் நம்ம கதி அவ்ளோதான்னு பெருமூச்சு விடுகிறாள் மித்ரா.
அந்த நேரத்தில் அவளது அறைக்கதவு தட்டப்படுகிறது. மித்ரா திருதிருன்னு முழிக்கிறாள். கதவைத் திறக்கப் போகாமல் வெறித்துப் பார்த்தபடி இருக்கிறாள். கதவு திறந்து மூவரும் உள்ளே வருகின்றனர். அப்போது மித்ரா லேப்டாப்பை மூடி விடுகிறாள். ஆனந்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதாவது உதவி வேணும்னா கேளு செய்து தாரேன்னு சொன்னேல்ல. ரெஸ்டாரண்ட்ல ஒரு சிசிடிவி ஃபுட்டேஜ் வேணும்னு ஆனந்தி கேட்கிறாள்.
அதுக்கு வேறு ஏதாவது வேணும்னா கேளு. அதை என்னால செய்து தர முடியாதுன்னு மறுத்து விடுகிறாள் மித்ரா. அதன்பிறகு மூவரும் ஆனந்தியின் அறைக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் மித்ரா மேல தான் சந்தேகம் என்கிறாள் ரெஜினா. அவள் திருதிருன்னு முழித்ததையும், ஒட்டுக் கேட்டதையும், ரெஸ்டாரெண்ட் மேனேஜர் சொன்ன மாதிரியே ஃபுட்டேஜ் டெலிட்டாகி இருக்கும்னு சொன்னதையும் வைத்து சந்தேகப்படுகிறாள்.
அது ஒருபுறம் இருக்க மித்ரா பென்டிரைவைத் தன் அறையில் யாரும் பார்க்காத வகையில் படர்கொடியில் ஒளித்து வைக்கிறாள். இதற்கிடையில் சுயம்புலிங்கம் ஆனந்தியின் அப்பா, அம்மாவிடம் தனக்கு ஏன் கோகிலாவோட கல்யாணப் பத்திரிகையை வைக்கல. எனக்குத் தானே முதல்ல வைக்கணும். நான்தான் ஊர் நாட்டாமைன்னு சொல்றான். அதற்கு பதில் சொல்லாமல் இருக்கிறார்

ஆனந்தியின் அப்பா. உடனே கல்யாண மண்டபத்தை வேற ஒருவருக்கு புக் பண்ணிட்டோம். நீங்க வேற மண்டபத்தைப் பாருங்கன்னு சுயம்புலிங்கம் பீதியைக் கிளப்பி விட, ஆனந்தியின் அப்பா என் தலையை அடமானம் வச்சாவது கோகிலாவின் கல்யாணத்தை இந்தத் தடவை நடத்துவேன் என்று உறுதியாகச் சொல்கிறார். இதற்கிடையில் அன்பு ஆனந்தி ஏன் தன்னிடம் பொய் சொல்லிவிட்டு ரெஸ்டாரண்ட் போகணும் என்ற கோபத்தில் நேராக ஹாஸ்டலுக்கு வருகிறான்.
செக்யூரிட்டியிடம் ஆனந்தியைப் பார்க்கணும்னு சொல்ல அவரும் வழக்கம்போல காயத்ரிக்குப் போன் பண்ணி விவரம் சொல்ல ஆனந்தி என்னால அன்புவை இந்த நிலைமையில பார்க்க முடியாது. நீங்க போய் சமாளிங்கன்னு அனுப்புகிறாள். இதைக் கண்டு கோபம் அடைகிறான் அன்பு.
அவர்களிடம் 'ஏன் அன்னைக்கு எங்கிட்ட பொய் சொல்லிட்டு ரெஸ்டாரண்ட் போனீங்க?'ன்னு கேட்க அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நேராக ஆனந்தியின் அறைக்குச் சென்று அவளிடமும் கோபத்தில் பேசி இதே கேள்வியைக் கேட்கிறான். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.