விஜயாவிடம் மாட்ட இருக்கும் மனோஜ்… இதுக்கு பருத்தி மூட்ட குடோனிலே இருக்கலாமே?

0
257

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவை விஜயா வெறுப்பேத்தி கொண்டு இருக்கிறார். இதில் கடுப்பாகும் மீனா எனக்கு அவர் கையால தாலியை கட்டிக்க ஆசை அதனால கட்டிக்கிட்டேன் என பதிலடி கொடுக்கிறார். இதை தொடர்ந்து முத்து தான் தாலி கட்டிய போட்டோவை காட்டிக்கொண்டு இருக்கிறார்.

ரவியும் ஸ்ருதியும் அழகா இருப்பதாக கூற மனோஜ் இது என்ன நல்ல கேமரால எடுக்கலையா கிளாரிட்டி இல்லையே என்கிறார். சினிமா எடுக்கிற கேமராலையா எடுக்க முடியும் எனத் திட்டுகிறார். பின்னர் பிரேம் எடுத்து மாட்ட போறேன் எனக் கூற ஹாலில் மாட்டாதே என்கிறார் விஜயா. அப்போ பெரிய பிரேமா போட்டுவேன் என்கிறார் முத்து.

இதையும் படிங்க: லால் சலாம் படத்துக்கு புரமோஷன் பண்ணும் தனுஷ்!.. என்ன இருந்தாலும் பாசம் போகாது போல!…

முத்து, மீனாவும் ரூமில் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்கின்றனர். அடுத்து ஸ்ருதி, ரவி கேம் விளையாடி சிரித்து கொண்டு இருக்க, மனோஜ் தூக்கத்தில் சாப்பாடு லிஸ்ட் தருகிறார். பின்னர் ரோகினி எழுப்பி கேட்க மசால் தோசை சாப்பிட ஆசை என மழுப்புகிறார். அந்த ஜோடியும் கிச்சு கிச்சு செய்து சிரித்து கொண்டு இருக்கின்றனர்.

மூவரும் சிரித்து கொண்டு இருக்க கடுப்பாகும் விஜயா அண்ணாமலையை எழுப்பி புலம்பிக்கொண்டு இருக்கிறார். பின்னர் காலையில் மீனா கடையில் இருக்க ரோகினி பார்சலுடன் கிராஸ் செய்யும் போது எனக்கும், மனோஜுக்கும் எதுவும் வேண்டாம் என்கிறார். பையை டைனிங் டேபிளில் வச்சிட்டு ரூமுக்கு செல்கிறார். வந்து அமரும் முத்து, மீனா வாங்கி வைத்து இருப்பதாக நினைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: இதைவிட ஒரு மகளுக்கு பெரிய கிரெடிட் இருக்குமா என்ன? ஐஸ்வர்யாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு

google news