Connect with us

latest news

பெரிய பில்டப்பு கொடுத்து புஸ்ஸுனு போன கதையால இருக்கு! ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த சிறகடிக்க ஆசை!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியை தேடி மனோஜ், முத்து, மீனா ஆகியோர் குமரிப்பாளையம் வருகின்றனர். அங்கு போவோர், வருவோரிடம் ரோகினி போட்டோவை காட்டி கேட்க அவர்கள் தெரியவில்லை எனக் கூறிவிடுகின்றனர்.

அம்மாவை பார்க்க வரும் ரோகினி வீட்டில் நடந்த விஷயத்தை கூறி விடுகிறார். உனக்கு தெரிஞ்சா நீ கஷ்டப்படுவனு மாப்பிள்ளை நினைச்சிருக்கலாம் என்கிறார். நீயும் அவருக்கு சப்போர்ட் செய்யாத. என்னை ஏமாத்திட்டேன் என்றும் புலம்பி கொண்டு இருக்கிறார். கிருஷ் வந்து பாசமாக கண்ணு சிவந்திருக்கு எனக் கேட்க கட்டிப்பிடித்து அழுகிறார்.

இதையும் படிங்க: மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு? ஒருவாரம் ஐசியூ சிகிச்சை!.. என்ன நடந்தது?

உடனே ரோகினி அம்மா குழந்தையை வெளியில் போய் விளையாட சொல்லி அனுப்பி விடுகிறார். இங்கு காரில் வரும் முத்துவிடம் கோச்சிக்கிட்ட மனோஜ் காரை நிறுத்து நானே போய் தேடிக்கிறேன் என வீராவசனம் பேச கடுப்பான முத்து காரை நிறுத்தி போ போய் தெரு தெருவா தேடு. கையில பத்து காசு இல்ல எனத் திட்டுகிறார். ரோட்டில் நின்று பேசிக்கொண்டு இருக்க அங்கு கிருஷை பார்த்து விடுகின்றனர்.

பின்னர் ரோகினி அம்மாவிடம் போய் கேட்கலாம் என நினைத்து எல்லாரும் அவர் வீட்டுக்கு கிளம்புகின்றனர். வீட்டுக்கு வரும் பார்வதி, விஜயாவிடம் பணக்கார மருமகளை தொலைச்சிட்டியா என்கிறார். எல்லாம் முத்துவால தான் எனக் கூற இப்போ கூட மனோஜை விட்டு தர மாட்டியே என்கிறார். குளம், குட்டையில கூட தேடி பார்க்க சொல்லி எனக் கூறி அனுப்பி விடுகிறார்.

இதையும் படிங்க: கமல் – ஸ்ரீவித்யா காதலை நிராகரிக்க இந்த காரணம் தான் இருந்தது!… ஸ்ரீவித்யா அண்ணி சொன்ன ரகசியம்..

அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் ரோகினியிடம் நீ சொல்லி இருக்க தப்ப விட இதெல்லாம் பெருசு இல்ல என்கிறார். நான் இனி அங்கே போக போறது இல்ல. நான் தூங்க போறேன் என படுத்துவிடுகிறார். அப்போ கார் சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்து ஷாக் ஆகிறார். தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு பின்வாசலுக்கு போய் மறைந்து கொள்கிறார். ரோகினி அம்மா வெளியில் போய் அவர்களை சமாளித்து வீட்டுக்குள் அழைத்து வருவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top