Connect with us

latest news

டேய் இது குடும்பமா இல்ல மென்டல் ஆஸ்பிட்டலா? எப்ப பாத்தாலும் தப்பை முத்து மேலயே போடுறீங்க?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வித்யா, ரோகினிக்கு காபி போட்டு வர கிச்சனுக்குள் செல்கிறார். அழுதுக்கொண்டு இருக்கும் ரோகினி திடீரென அங்கிருந்து கண்ணைத் துடைத்து கொண்டு கிளம்பி விடுகிறார். வெளியில் வந்து பார்க்கும் வித்யா ரோகினியை காணும் என மனோஜுக்கு கால் செய்கிறார்.

அவர் வெளியில் போய் இருப்பதாக கூற, வித்யா இங்க தான் வந்தா இப்போ காணும். போன் வேறு ஆஃபில் இருக்கு எனக் கூற மனோஜ் பதட்டமடைகிறார். வெளியில் வந்து மனோஜ் இந்த விஷயத்தை விஜயாவிடம் கூற அவரும் என்ன வயித்துல புளியை கரைக்கிற என்கிறார். எல்லாம் முத்துவால தான் என மனோஜ் அவரிடம் சண்டைக்கு போகிறார்.

இதையும் படிங்க: ரேர் வீடியோ.. கிரிக்கெட் விளையாடும் போது டென்ஷனான விஜய்!.. செம கோபக்காரரா இருப்பாரோ தளபதி!..

நீ அசிங்கப்படுத்துன அதான் எல்லாம் ஆச்சு என எல்லாரும் முத்து பக்கம் கத்தியை நீட்டுகின்றனர். ஸ்ருதி அவங்க பெர்சனல் விஷயத்தை நீங்க ஏன் பேசுறீங்க? ஏற்கனவே உங்களுக்கு சென்ஸோட பேச தெரியாது. இன்னைக்கு ரொம்ப ஓவர் என்கிறார். முத்துவிடம் ரவியும் உன்மேல தான் தப்பு என்கிறார்.

உடனே மீனா அப்போ ரோகினி என் புருஷனுக்கு வேலை இல்லனு வந்து பொதுவாக சொன்னதும், கேள்வி கேட்டதும் சரியா? அப்போ யாரும் இதை பத்தியே பேசலை என்கிறார். அண்ணாமலையும் நீ என்கிட்ட தனியா பேசி இருக்கலாமே என்கிறார். சரி இப்போ நம்ம வீட்டு பொண்ணு வரலை போய் தேடுங்க என்கிறார். 

இதையும் படிங்க: அமெரிக்காவில் அயலானுக்கு ஆப்பு அடித்த கேப்டன் மில்லர்!.. ஐமேக்ஸ் ரிலீஸ் வேற!.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை!

மனோஜுடன் முத்துவை அனுப்ப இருவரும் காரில் தேடிப்போகின்றனர். கடைசியில் பார்லருக்கு போன் செய்து கேட்க ரோகினி காசை எடுத்துக்கொண்டு குமரிப்பாளையம் போனதாக தகவல் கிடைக்கிறது. அந்த நேரத்தில் மீனாவும் கால் செய்கிறார். குமரிப்பாளையம் என்ற பெயரை கேட்டதும் அது கிருஷ் இருக்க ஊராச்சே என்கிறார்.

சரி நீ காசை எடுத்துக்கிட்டு வா. போய் பார்த்துட்டு வரலாம் என்கிறார். மனோஜ் விஜயாவுக்கு கால் செய்து விஷயத்தை சொல்கிறார். இந்த முத்து தன்னை வம்பு செய்து கொண்டே வருவதாகவும் கூறுகிறார். இப்போ அவன் தயவு வேண்டும். பொறுத்துக்கோ அப்புறம் பாத்துக்கலாம் என்கிறார். மீனா அவரை முன் சீட்டில் அமர வைக்கிறார் முத்து.

குமரிபாளையத்துக்கு எதுக்கு போச்சு ஒருவேல பெரிய வக்கீல் யாரையும் பார்க்க போயிருக்குமோ என முத்து பேசிக்கொண்டே இருக்க மீனா அமைதியா கார் ஓட்டுங்க இல்ல மாமாக்கு போன் செய்துவிடுவேன் என்கிறார். அதனை தொடர்ந்து முத்து அமைதியாக கார் ஓட்டிவருவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: கடைசி நேரத்துல சிக்கல்!.. புரமோஷன் பண்ணது எல்லாம் வீணா?.. அந்த படம் வெளியாகாதாம்?..

google news
Continue Reading

More in latest news

To Top