ரோகிணியை பத்தி ரோகிணிக்கிட்டையே அசிங்கமா பேசுறீங்களே விஜயா… நீங்களாம்?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரோகிணி யார் எங்க வேலைக்கு போயிருந்தா உங்களுக்கு என்ன என்கிறார். மீனாவும், முத்துவும் ஒரு மாதிரி பார்க்க நீங்க வேலைக்கு கிளம்பலையா எனச் சமாளிக்கிறார். நாங்க தினக்கூலி ஒரு நாள் போகலைனா ஒன்னும் ஆகாது.

நீங்க பெரிய தொழில் செய்றீங்க. இன்னைக்கு போகலைனா பெரிய நஷ்டம் ஆகிவிடும் என மீனா நக்கலாக கூறுகிறார். இதனால் ரோகிணி முகம் கறுத்து செல்கிறார். பின்னர் கிரிஷ் கண் முழிக்க அவனுக்கு முத்து, மீனா ஆறுதல் சொல்கின்றனர். டாக்டர் வந்து பார்த்துவிட்டு இரண்டு நாள் கழித்து கட்டை பிரித்து கொள்ளலாம் என்கிறார்.

இதையும் படிங்க: நிவேதா பெத்துராஜ் கார் டிக்கியில என்ன இருந்துச்சு தெரியுமா?.. போலீஸ் உடன் வாக்குவாதம் செய்தது ஏன்?

ரோகிணிக்கு அவர் அம்மா கால் செய்து இந்த விஷயத்தினை கூற நாங்க ஊருக்கு போயிட்டு வரோம் என்கிறார். ஆனால் ரோகிணி வேண்டாம். இரண்டு நாள் தானே. அங்கையே இருங்க. நைட் நான் வந்து உன்கூட இருக்கேன் என்கிறார். அவர் போன் பேசிவிட்டு வர முத்து பணத்தினை கட்டிவிடுகிறார்.

நாங்க இங்கையே இருக்கோம் என அவர் கூற முத்து, மீனா இங்கை உங்களுக்கு செட்டாகாது. எங்க வீட்டில் இருந்து கட்டை பிரிச்சிக்கிட்டு போகலாம் என்கிறார். அடம் செய்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர். வீட்டில் சமைக்க கூடாதுனு தான் இந்த மீனா வெளியில் போய் இருப்பதாக விஜயா திட்டிக்கொண்டு இருக்கிறார்.

அப்போ மீனா வர என்னமா வெளில சுத்தி முடிஞ்சிதா எனக் கேட்க அண்ணாமலை டாக்டர் என்ன சொன்னாங்க எனக் கேட்க மூணு நாள் ரெஸ்ட் எடுக்க சொன்னதாக கூறுகிறார். அப்போ ரோகிணி அம்மா வந்து நிற்க அங்கிருக்கும் ரோகிணியும் அதிர்ச்சி ஆகிறார். மீனா நடந்ததை சொல்லி கட்டி பிரிக்கிற வரை இங்க இருக்கட்டும்னு கூட்டிட்டு வந்ததாக சொல்கிறார்.

இதையும் படிங்க: அதிக சம்பளம் வாங்குவதில் போட்டி போடும் கோலிவுட் இயக்குனர்கள்!. நம்பர் ஒன் இவர்தானாம்!..

விஜயா கண்டவங்க தங்குறதுக்கு இது என்ன சத்திரமா என்கிறார். ஆனால் மனோஜ் கூட ரோகிணி அம்மாவிடம் ஆறுதலாக பேசி விஜயாவிடம் தங்க அனுமதி கேட்கிறார். ரவியும் கேட்க வேறு வழியில்லாத விஜயா இங்க ரூம் எங்க இருக்கு எனக் கேட்க ரோகிணி என் ரூமில் தங்கிட்டும் என்கிறார். மனோஜுக்கு உதவி பண்ணிருக்காங்க. நாமளும் ஹெல்ப் பண்ணலாம் ஆண்ட்டி என்கிறார்.

முத்து கிரிஷை அவர்கள் ரூமில் படுக்க வைக்கிறார். உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா தானே என அண்ணாமலை கேட்க ஆமாம் துபாயில் வேலை செய்றாங்க என்கிறார். எல்லாரும் சாப்பிட சென்றதும், விஜயா ரோகிணியை அழைத்து நீ தான் நல்லா பிளான் பண்ணுவ. இவங்களை நாளைக்கே வெளியில் அனுப்பனும். அவங்களை பார்த்தாலே சரியா தோணலை. அப்பா, அம்மா எங்க ஓடிப்போச்சோ என அசிங்கமா பேச ரோகிணி ஆண்ட்டி என கத்திவிடுகிறார். விஜயா என்னம்மா எனக் கேட்க கேட்க போகுது எனக் கூறி சமாளிப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

 

Related Articles

Next Story