Connect with us

Cinema News

விஜயா உங்களுக்கு ஆனா இவ்வளோ ஆசை கூடாது… வேண்டாத மருமகள்கிட்ட இதை கேட்கலாமா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா தன்னுடன் மாலை கட்டியவர்களிடம் வேலை செய்ததுக்கு பணம் கொடுக்க அவர்கள் வாங்க மறுத்து விடுகின்றனர். அதை தொடர்ந்து முத்துவுக்கு ஒரு கால் வர அவர் பேச ஒதுங்கி செல்கிறார்.

இந்த பணத்தினை வச்சு என்ன செய்ய போற நீ எனக் கேட்க தாலிச்செயின் வாங்கிப்போட்டுக்கோ என்கிறார்கள். ஆனால் மீனா அவருக்கு கார் வாங்கிக்கொடுக்க போவதாக கூறுகிறார். இதை தொடர்ந்து வீட்டுக்கு வரும் முத்து, மீனா அண்ணாமலையிடம் காசை கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர்.

இதையும் படிங்க:குட் பேட் அக்லி!.. அப்பவே இதுக்கு யாரு செட்டாவான்னு ஜோசியம் பார்த்த வெங்கட் பிரபு!.. எப்படி பாஸ்!..

அவர் நீங்க உழைச்ச காசு. நீங்களே வச்சிக்கோங்க எனக் கூறிவிடுகிறார். அதை பார்த்துக்கொண்டு இருந்த விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். பின்னர் ஹாலில் உட்கார்ந்து இருக்க அங்கு வரும் ரோகினியிடம் நீயும் தான் என் பேரில் கடை வச்சிருக்க. மாதா மாதம் பாக்கெட் மணியெல்லாம் தர. ஆனால் ஒரு சிலர் என் பேருல கடை வச்சிருக்காங்க.

ஆனா, ஒன்னும் கொடுக்கிறதே இல்லையே என மீனா குறித்து பேசுகிறார். இதை கேட்டுக்கொண்டு இருந்த மீனா உடனே ரூமுக்குள் சென்று காசை எடுத்து எண்ணுகிறார். இதை பார்த்த ரோகினி ஆண்ட்டி உங்களுக்கு தான் கொடுக்க போறாங்க என்ற ஆசையை தூண்டி விடுகிறார்.

அங்கு வரும் மீனா, விஜயாவை அழைக்கிறார். என்ன என அவர் கேட்க அடுப்பில் சாம்பார் வச்சிருக்கேன். கொதிச்சதும் ஆஃப் பண்ணிடுங்க. நான் வெளியில் போயிட்டு வருவதாக கூறுகிறார். இதை கேட்ட விஜயா, காசு வந்ததும் அவளுக்கு வாய் அதிகம் ஆச்சு என்கிறார். ஷெட்டுக்கு வரும் மீனா கார் சர்ப்ரைஸா வாங்கிக்கொடுக்க இருப்பதாக கூறுகிறார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது!.. பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டாங்களே.. ஜூம் பண்ணும் பாய்ஸ்!

செல்வம் மற்றும் மற்ற நண்பர்கள் எதுவும் உதவி வேணுமா எனக் கேட்க மீனா வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். முத்து ஏற்கனவே ஒரு காரை பார்த்து வச்சிருப்பதாக செல்வம் கூற அதை பார்க்க கிளம்புகிறார். கார் ஓனர் 3 லட்சம் ஆகும் எனக் கூற தன்னிடம் இருக்கும் காசுடன் இன்னும் கொஞ்சம் கடனாக வாங்க முடிவு செய்கிறார் மீனா. அதுகுறித்து சீதாவிடம் பேசும்போது, நம்ம ஏரியால ஒருத்தர் நியாயமா காசு கொடுக்கிறாரு.

அவருக்கிட்ட கேட்டு பார்க்கலாம். ஆனா அவர் கடையை பார்த்துட்டு தான் காசு தருவாரு என்கிறார். அந்த நபர் மீனா கடையை வந்து பார்த்து கொண்டு இருக்க அங்கு வரும் விஜயா நீங்க என் வீட்டை ஏன் நோட்டம் விடுறீங்க எனக் கேட்கிறார். அவர் உங்க பேரு என்ன எனக் கேட்க விஜயா தன் பெயரினை கூறுகிறார். ஓ உங்க பேருல தான் கடை வச்சிருக்கீங்களா என அந்த நபர் கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?

google news
Continue Reading

More in Cinema News

To Top