Connect with us

Cinema News

என்னங்க ஒரு முடிவுக்கு வாங்க? முத்து மாட்டுவாரா இல்ல தப்பிச்சிடுவாரா? ஆர்வத்தில் ரசிகர்கள்!…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவிடம் கால் வலிக்குதா எனக் கேட்கிறார். இப்போ பரவாயில்லை கொஞ்சம் எரியுது என்கிறார். அப்போ செல்வத்திடம் இருந்து கால் வர எழுந்து சென்று பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்து ஸ்ருதி அம்மா இன்னொருவரை போய் முத்துவிடம் வம்பு வளர்க்க அனுப்புகிறார்.

அவர் நேராக முத்துவின் முதுகில் பளார் என அடித்துவிடுகிறார். முத்து கோபமாக திரும்ப அவர் என் நண்பர் என நினைத்ததாக சமாளித்து விடுகிறார். மீனா சண்டைக்கு போக முத்து அவரை சமாளித்து அனுப்பி விடுகிறார். முத்து இதெல்லாம் வேண்டும் என்றே நடப்பதாக கூறுகிறார்.

இதையும் படிங்க: எப்பவுமே ஹைடெக் தான்! இந்த ஒரு காரணத்துக்காகவா விலகினார்? வெளியான நயன் – சசிகுமார் பட சீக்ரெட்ஸ்

மீனா அதெல்லாம் எதுவும் இருக்காது என்கிறார். அப்போ பார்வதி வந்து விஜயா கூப்பிடுவதாக மீனாவை அழைத்து செல்கிறார். மீனா போக முத்து இங்கையே இரு என்கிறார். இந்தோ வந்துடுறேன். எங்க இருந்தாலும் என் கண்ணு உங்களிடம் தான் இருக்கும் என சமாளிக்கிறார்.

அண்ணாமலையை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்து கொள்கிறார் முத்து. அப்போ விஜயா வந்து ஸ்ருதி அப்பா உங்களிடம் பேச கூப்பிட்டார் என அழைத்து செல்கிறார். அங்கு அண்ணாமலை செல்ல வாசுதேவன் கண்டுக்காமல் சென்றுவிடுகிறார். பின்னர் மற்றவர்களிடம் குப்பை கோபுரத்துக்கு வரும்  என நினைக்கலை எனப் பேசுகிறார்.

இதையும் படிங்க: பிசியா நடிச்சிக்கிட்டு இருந்த பரத்!.. இவரு நிலமை இப்படி ஆகிப்போச்சே!…

நல்லவேளையா முத்து அங்கு இல்லை என அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். இந்த நேரத்தில் ரோகினி ஏற்பாடு செய்த ஆள் முத்துவை அழைத்து நம்ம ஒயின்ஷாப்பில் பார்த்ததாக கூறுகிறார். தொடர்ந்து முத்துவிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். நேரம் ஆவதால் முதலில் ஸ்ருதிக்கு தாலி பிரிச்சிவிடலாம் என்கிறார் விஜயா.

மனோஜ் ரோகினிக்கு தான் செய்யணும் என்கிறார். ஆனால் அவங்க அப்பா இன்னும் வரலையே என்கிறார் விஜயா. அவர் வந்ததும் ரோகினிக்கு பண்ணுவோம். இப்போ ஸ்ருதிக்கு செஞ்சிவிடலாம் என அவரை மேடைக்கு அழைத்து வருகின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top