Connect with us

latest news

என்னங்கடா நீங்க? நியாயமே இல்லமா அவங்க செஞ்ச தப்புக்கு.. எல்லாம் முத்துக்கிட்ட சண்டைக்கு வரீங்க..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி ரூம் இல்லாமல் தூங்கியதாக தப்பாக நினைத்து கொள்கிறார் அவர் அம்மா. இதையடுத்து வாசுதேவனை கூப்பிட அவர் நான் வர முடியாது எனக் கூறிவிட ஆட்டோ பிடித்து அண்ணாமலை வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு அவரை பார்த்த ஸ்ருதி வாங்கம்மா எனக் கூப்பிட பொறிந்து தள்ளுகிறார். நீ இங்க இருக்க வேண்டாம் வா வீட்டுக்கு என அழைக்கிறார். மீனா வர இதுக்காகவா என்கிட்ட வந்து பேசுன எனக் கோபமாக கேட்கிறார். அப்போ அங்கு விஜயா வர வாங்க சம்மந்தி என அழைக்கிறார்.

இதையும் படிங்க: ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க.. மனசு உடைந்து திடீரென கதறி அழுத மீசை ராஜேந்திரன்!.. ஏன் தெரியுமா?..

நீங்க ராணி மாதிரி வச்சிப்பீங்கனு தானே அழைச்சிக்கிட்டு போனீங்க. இப்போ ரூம் இல்லாம மாடில தூங்க வச்சிங்க எனக் கேட்க அவர் புரியாமல் நிற்கிறார். அந்த நேரம் பார்த்து முத்து அங்கு வந்துவிட ஒன்னும் பேசாமல் தான் நிற்கிறார். பின்னர் அண்ணாமலை இந்த போஷனை கட்ட லோனுக்கு ஸ்ருதி அப்பாவிடம் தான் கெஞ்சிக்கிட்டு நின்னாரு.

அப்போவே பிள்ளை பெத்துக்க போறோம்னு தெரிஞ்சா மூணு ரூமா கட்டிக்க வேண்டியது தானே எனக் கேட்க முத்துவிற்கு கோபம் வந்து விடுகிறது. எங்க அப்பா பத்தி என்ன பேசுறீங்க எனக் கேட்டு சண்டைக்கு நிற்கிறார். ஆனால் அண்ணாமலை பற்றி ஸ்ருதி அம்மா கூறியதை யாரும் கேட்காமல் முத்துவை அமைதியா இருக்க சொல்கிறார் ரவி. ’

இதில் முத்து உங்க வீடு பெருசா தானே இருக்கு நீங்க நிறைய பிள்ளை பெத்துக்க வேண்டியது தானே என்கிறார். ஸ்ருதி அம்மா இவ ரவுடி மாதிரி பேசுவதாக சண்டை போட மீனாவும் முத்துவுக்கு பேச வருகிறார். ஆனால் விஜயா முத்து, மீனா வாயை அடைக்கிறார். ஸ்ருதி அம்மா அவரை அழைத்துக்கொண்டு வெளியில் போகும் சமயம் பார்த்து அண்ணாமலை அங்கு வந்து விடுகிறார்.

இதையும் படிங்க: மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..

அவர் உள்ளே அழைத்து போய் கேட்க முத்து மரியாதை இல்லாமல் நடத்தியதாக கூற அண்ணாமலை மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஆனால் முத்து தப்பு நான் செய்யவில்லை எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார். கடைசியில் உண்மையை கூறி ஸ்ருதி அம்மாவை ரூமுக்குள் அழைத்து செல்கிறார். விஜயா நிம்மதியாக உட்கார்கிறார்.

செட்டுக்கு வரும் முத்து இந்த விஷயத்தினை செல்வத்திடம் சொல்லி புலம்பிக்கொண்டு இருக்கிறார். கடைசியில் அவர் தொல்லை தாங்காமல் அருகில் இருக்கும் பாருக்கு காரில் அழைத்து செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top