Connect with us

Cinema News

ஒரே நாளில் ரோகிணியை இப்படி கொடுமைப்படுத்தும் விஜயா… மீனா எஸ்கேப் தான்!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் ரோகிணிக்கு எதுவும் சாப்பிடக் கொடு என்கிறார். மீனாவை சமைக்க சொல்ல அங்கிருக்கும் முத்து அம்மா சொன்னதே அவங்களே மறந்துட்டாங்க என்கிறார். விரதம் இருக்கவங்க அவங்களா சமைச்சு தானே சாப்பிடணும்.

இதைக் கேட்ட விஜயா, ஆமால இந்த விஷயத்தை மறந்துட்டேன். உடனே அழைத்துக்கொண்டு உள்ளே சென்று பாத்திரங்களை கழுவ வைத்து சமைக்க வைக்கிறார். உப்பு போட போன ரோகிணியை உப்பில்லாமல் சமைக்க வேண்டும் என கூறியிருப்பதாக அதிர்ச்சி கொடுக்கிறார். காலையில் எழுந்து மீனா கோலம் போட போக அங்கு வரும் விஜயா கோலம் போடாதே என கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.

இதையும் படிங்க: நிஜ முத்துப்பாண்டியாவே மாறிய பிரகாஷ்ராஜ்! ‘கில்லி’ படத்தில் இயக்குனரை மிரட்டிய சம்பவம்

அப்போ அண்ணாமலை வர எதுக்கும்மா நின்னுகிட்டு இருக்க.என்கிறார். அத்தை போடாதேனு சொல்லிட்டு போயிருக்காங்க என்கிறார். கையோடு ரோகிணியை அழைச்சிக்கிட்டு வருகிறார். ரோகிணி கோலம் போட சொல்ல அவர் தனக்கு வராது என்கிறார். ஆனால் அண்ணாமலை நீ போடுறவரை விட போவதில்லை. எதையாது போடு என்கிறார். ரோகிணியும் கைக்கு வந்ததை கிறுக்கிவிட்டு செல்கிறார்.

மீனா பூரி, மசால் சமைத்து எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். ரோகினியும் சாப்பிட உட்கார முத்து நிறுத்துங்க என்கிறார். எல்லாரும் அவரைப் பார்க்க பார்லர் அம்மா பத்திய சாப்பாடு தானே சாப்பிடணும். அப்போ தான அவங்க அப்பா சீக்கிரமா வெளிய வருவாரு எனக் கேட்க விஜயாவும் நியாபகம் வந்தவராக ரோகிணியை எழுப்பி விடுகிறார். மனோஜையும் விரதம் இருக்க சொல்லி எழுப்பி விடுகிறார்.

இதையும் படிங்க: கமலை பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த்… எதுக்குன்னு தெரியுமா? அந்த குணா என்ன சொல்றார்னு பாருங்க…

இதையடுத்து, ஜீவா முத்துவுக்கு கால் செய்கிறார். அவர் காரில் ஏஜென்சிக்கு வந்து ரிட்டர்ன் டிக்கெட் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறார். பின்னர் தன்னை விசாரிக்க மனோஜ் மற்றும் ரோகிணி வந்த விஷயத்தினை அறிந்து ஷாக்காவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top