Connect with us

latest news

எம்மா ஏய்..! விஜயா மாதிரி ஒரு மாமியார் யாருக்கும் வரக்கூடாதுடா யப்பா..! ப்ளான் போடுற வயசப்பாரு..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பார்வதியிடம் வந்து புலம்பி கொண்டு இருக்கிறார் விஜயா. ஒரு கட்டத்தில் இவங்க பண்ணுற பிரச்னையில் ஸ்ருதி அவ வீட்டுக்கு போயிடுவாளோனு பயமா இருக்கு. அதனால நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன். என்ன என்கிறார் பார்வதி.

அந்த மீனாவையும், முத்துவையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பலாம் என்கிறார். இதில் பார்வதியே அதிர்ச்சியாக அதற்கான வேலையை இன்னைக்கே தொடங்க போறேன் என்கிறார். பின்னர் வீட்டில் மீனா வேலை செய்து கொண்டு இருக்க அங்கு வரும் விஜயா ஸ்ருதிக்கு சுடுதண்ணி கேட்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி அதுக்கு வொர்த்!. ஆனா கிடைக்கவே இல்ல.. கடைசி வரை வருத்தப்பட்ட பாலச்சந்தர்…

மீனா வச்சிக்கொடுக்க அதை ஸ்ருதி எடுத்து போக முயல்கிறார். இல்ல நீ கஷ்டப்படாத மீனா போய் ஊத்து என்கிறார். ரோகினிக்கு சுடுதண்ணீர் கேட்க, மனோஜுக்கும் சுடுதண்ணி கேட்கிறார். ஆனால் மீனா என்னால் செய்ய முடியாது எனக் கூறி விடுகிறார். விஜயா ஏன் செய்ய மாட்ட எனக் கடுப்படிக்கிறார்.

அங்கிருக்கும் முத்து அதான் செய்ய மாட்டேனு சொல்லிட்டா தானே விடுங்க என்கிறார். மனோஜ் எக்ஸர்சைஸ் செஞ்சிட்டு சுடுதண்ணில குளிச்சா தான் நல்லா இருக்கும் எனக்கூற ஏன் அப்போ தான் நல்லா ஓடிப்போ முடியுமா என முத்து கலாய்க்கிறார். இதில் கடுப்பான மனோஜ் எனக்கு வேண்டாம் எனச் சொல்லி சென்று விடுகிறார்.

முத்து நைசாக போய் சுடுத்தண்ணியை பக்கெட்டில் ஊத்திவிட்டு வருகிறார். ரூமுக்குள் வரும் மனோஜ் தண்ணியை செக் பண்ணாமலேயே மேலே ஊத்திக்கொண்டு அய்யோ அம்மா எனக் குதிக்கிறார். இதில் விஜயா மீனாவிடம் வந்து எகிற நான் தான் செஞ்சேன் என்கிறார். ரோகினி கொடூரமா ஏன் செய்றீங்க எனத் திட்டுகிறார்.

இதையும் படிங்க: உனக்கென்ன ரஜினி – விஜயகாந்துன்னு நினைப்பா?!. மோகனின் ஆசைக்கு ஆப்பு வைத்த இயக்குனர்..

மீனாவ வேலை வாங்காதீங்க. உங்களுக்கு வேண்டும் என்றா நீங்களே செஞ்சீக்கோங்க என்கிறார். அப்போ அண்ணாமலை அங்கு வர முத்துவை பற்றி வத்தி வைக்கிறார். ஆனால் அவர் திட்டாமல் விளையாட்டுக்கு செஞ்சிருப்பான் எனக் கூறிவிடுகிறார். இவங்க ரெண்டு பேரால தான் வீட்டுல சண்டை நடக்குது என விஜயா கூறுகிறார்.

அண்ணாமலை மனோஜ், ரவியால பிரச்னையே நடந்து இருக்கு என்கிறார். நான் ஒரு நல்ல முடிவு எடுத்துருக்கேன் எனக் கூற சொல்லு அப்புறம் அது என்ன முடிவுனு பார்ப்போம் என்கிறார். முத்து, மீனாவை தனிக்குடித்தனம் வச்சிடலாம் எனக் கூற அண்ணாமலை அதிர்ச்சி ஆகிவிடுகிறார். நீ சொல்லிட்ட நான் யோசிக்கணும் என்கிறார். இதில் விஜயா சந்தோஷமாகி சரி யோசிச்சே சொல்லுங்க எனக் கூறி செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: பிரசாந்தின் இந்த நிலைமைக்கு காரணமே சத்யராஜ்தான்! நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த தியாகராஜன்

google news
Continue Reading

More in latest news

To Top