Connect with us

latest news

என்னம்மா ரோகினி அப்படியே பல்டி அடிச்சிட்ட!.. இந்த ரவியும், ஸ்ருதியும் யாரு பக்கம் டா! மாத்தி மாத்தி பேசுறீங்க…

Siragadikka aasai:இன்றைய எபிசோட்டில் ரோகினி வீட்டுல் மனோஜ், முத்து, மீனா இருக்கின்றனர். கிரிஷ் ஏரோபிளேன் எடுத்து மனோஜிடம் காட்டி எங்க அத்தை வாங்கி கொடுத்தாங்க என்கிறார். இதை கேட்ட மீனா யாருமா உங்க பொண்ணு துபாயில் இருந்து வந்து இருக்காங்களா என்று கேட்கிறார்.

இல்லமா வேற பொண்ணு என சமாளித்துவிடுகிறார். பிறகு ரோகினி போட்டோவை காட்டி இவங்களை பார்த்திருக்கீங்களா எனக் கேட்க அவர் அம்மா இல்ல எனக் கூறிவிடுகிறார். முத்து இதுக்கு மேல எங்க போய் தேடறது என்க மனோஜ் என்ன முழுசா நம்பின ரோகிணியை நான் ஏமாத்திட்டேன்.

இதையும் படிங்க: ராதிகாவிடம் சிக்கினாரா கோபி? தொடரும் செழியன், எழில் பிரச்னை!… என்னங்க நடக்குது இங்க?

எங்க அம்மாக்கு பிறகு என் மேல ரொம்ப அன்பு வச்சிருந்தவ அவதான் என்கிறார். அவ இல்லாம இனிமே என்ன பண்ண போறேன் என அழுகிறார். இதை பார்த்த கிரிஷ் அவர் கண்ணை துடைத்து விடுகிறார். இதை தொடர்ந்து ரோகினி அம்மா கவலைப்படாதீங்க கண்டிப்பா கிடைச்சிடுவாங்க என்கிறார்.

பின்னர் மூவரும் கிளம்பி போய் விடுகின்றனர். அவ்வளோ அந்த பொண்ணாச்சும் நல்லா இருக்கட்டும் எனக் கூற மீனா சும்மா இருங்க. கோபம் குறைஞ்சா அவங்களே வீட்டுக்கு வருவாங்க எனக் கூறி எல்லாரும் காரில் ஏறி வீட்டுக்கு கிளம்புகின்றனர்.

ரோகினி அம்மா நீ சொன்ன தப்பை விட மாப்பிள்ளை பெருசா எதுவும் பண்ணலை. ஒழுங்கா வாழப்பாரு என அறிவுரை சொல்லி அனுப்புகிறார். வீட்டுக்கு வரும் மனோஜ் விஜயாவை கட்டிக்கிட்டு அழுகிறார். ரோகினி காணும் எல்லாம் இவனால தான் என்கிறார். உடனே என்னை சொல்லிடுவியே நீ ஏமாத்துன என்கிறார்.

இதையும் படிங்க: மூன்று முறை கருகலைப்பு! ஸ்ரீவித்யாவின் திருமணக் கொடுமைகளை புட்டு புட்டு வைத்த அண்ணி

அதன் பிறகு அண்ணாமலையிடம் மனோஜை பத்தி இனி இங்க யாரும் தப்பா பேசக்கூடாது. நீங்களோ ஆண்ட்டியும் தான் கேட்கலாம். ஆனா மத்தவங்க அவரை அவமானப்படுத்தி பேசுவதை பார்க்க முடியாது. அப்படி நடந்தா இனிமே நாங்க இந்த வீட்ல இருக்க மாட்டோம் என ஷாக் கொடுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top