Connect with us

Cinema News

ரோகினிக்கு பயத்தை காட்டிய விஜயா… முத்துவுக்கு காரை பரிசாக கொடுத்த மீனா…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியிடம் உனக்கு நான் காசு கொடுத்ததால தான் அந்த பார்லர் வந்துச்சுனு மறந்துடாத என கத்துகிறார் விஜயா. சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லாம இருந்தேன் ஆண்ட்டி என்கிறார். என்ன சர்ப்ரைஸ் உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்வீயா என விஜயா தொடர்ந்து சத்தம் போடுகிறார்.

என்ன ஆண்ட்டி ரொம்ப பேசுறீங்க? அதான் எங்க அப்பாக்கிட்டேந்து காசு வாங்கிட்டு வந்து கொடுத்துட்டேன்ல என்கிறார். கொடுத்துட்டா அதுக்கு நான் பட்ட அவமானம் இல்லாம போயிடுமா? இன்னைக்கு வரையும் உங்க அப்பா வந்து பார்க்கலை. மத்த மாமியாருனா சும்மா விட்டுடுவாங்களா?

இதையும் படிங்க: கதையா?.. பிரம்மாண்டமா?.. குழம்பியதால் சினிமாவிலிருந்தே காணாமல் போன தயாரிப்பாளர்!.. அட இவரா?!..

நீ எவ்வளோ பெரிய வீட்டு பெண்ணா வேணாலும் இரு. ஆனா இங்க விஜயா மருமக அதை மறந்துடாத எனத் திட்டுகிறார். பின்னர் வெளியில் செல்லும் ரோகினிக்கு இதுக்கே இப்படி பேசுறாங்க. இன்னும் மத்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகுமோ எனப் பயப்படுகிறார். அடுத்து முத்துவை வந்து அழைத்துக்கொண்டு காரை பார்க்க செல்கிறார் செல்வம்.

பிரண்டுக்கு எனக் கூறி முத்துவை ஓட்டி பார்க்க சொல்ல அவரும் ஓட்டி பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொல்கிறார். இதை அருகில் இருந்து மீனா கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் சந்தோஷப்படுகிறார். அடுத்தநாள், காலை மீனா முத்துவை வலுக்கட்டாயமாக கோயிலுக்கு கூட்டி செல்கிறார். அங்கு காருடன் செல்வம் இருக்க என்ன உன் பிரண்ட் காரை வாங்கிட்டானா என்கிறார்.

இதையும் படிங்க: என்னது!.. சின்னி ஜெயந்த் இவ்வளவு படங்களை இயக்கியுள்ளாரா?!.. அட ஆச்சரியமா இருக்கே!..

ஆமா எனக் கூற அய்யர் வந்து மந்திரம் சொல்கிறார். பின்னர் முத்து புரியாமல் நிற்க மீனா அம்மா வந்து கார் உங்களுக்கு தான் மாப்பிள்ளை எனக் கூற ஆச்சரியத்தில் நிற்கிறார். மாலை கட்டி வந்த காசை எல்லாம் போட்டு அக்கா வாங்கிட்டா எனவும் கூறுகிறார். பின்னர் முத்துவும், மீனாவும் ஏறிச்சென்று காரை எடுக்கின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top