Connect with us

Cinema News

முத்துவை நம்பாத மீனா.. கைக்கழுவிய அண்ணாமலை… சப்போர்ட் செய்யும் நண்பர்கள்…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து நான் குடிக்கலை மீனா எனக் கூற உங்களை எல்லாம் திருத்த முடியாது. நல்லவேளை என் அப்பா இல்லை. இருந்தா காலம் முழுக்க கவலைப்பட்டு இருப்பார். எல்லாம் என் தலையெழுத்து என்கிறார். நீயும் நம்பலை. நான் குடிக்காரனாவே இருக்கேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

சிட்டி ரோட்டில் செல்லும் மீனாவை வழி மறித்து எனக்கு அட்வைஸ் பண்ணக்கா. உன் புருஷனை குடிகாரன் என ஊரே பேசுது. அவருக்கு அட்வைஸ் பண்ணு. குடிச்சாலும் கார் ஓட்டாதீங்கனு சொல்லு என்கிறார். அவருக்கு தான் அட்வைஸ் தேவைப்படுது. பாவம் உன் வாழ்க்கை இந்த லட்சணத்துல தான் இருக்கணும் என எழுதி வைத்து இருப்பதாக நக்கல் பேசுகிறார்.

இதையும் படிங்க: ஈஸ்வரிக்கிட்ட ஒருவழியா விஷயத்தினை உடைச்சிட்டாரே கோபி… இனியாவது கதைய மாத்துங்கப்பா…

செல்வத்திடம் பேசிக்கொண்டு இருக்கும் முத்து சத்தியமா நான் குடிக்கலைடா என்கிறார். எங்களுக்கு தெரியும்டா. நாங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டுனாலே திட்டுவ. இதுக்கு முன்னாடி சத்யா விஷயம் தெரிஞ்சப்போ தான் குடிச்ச அப்போ கூட வண்டி ஓட்டலையே என்கிறார். எங்க அப்பா கூட நம்பலை என்கிறார். சரிவிடு நாளைக்கு ஸ்டேஷனில் போய் கார் எடுக்கிற வழியை பாரு எனக் கூறுகிறார். அடுத்ததாக மீனா விற்க வருகிறார்.

அங்கு தெரிந்தவர்கள் நாட்டு மருந்தினை கலந்து கொடுத்தால் குடி பழக்கம் நின்னுடும் என்கிறார். உடனே மீனாவும் அந்த மருந்தை வாங்கி செல்கிறார். முத்துவுக்கு ஜீஸ் போட்டு அதில் மருந்தை கலந்து வைக்கிறார். அப்போ அண்ணாமலை கூப்பிட ஒரு பூ ஆர்டர் வந்திருப்பதாக சொல்லி 1000 ரூபாயை கொடுக்கிறார். உன் பூக்கடை சீக்கிரம் கடலா மாறணும் என்கிறார்.

இதையும் படிங்க : காசுக்கு ஆசைப்பட்டு கோட்டை விட்ட கரண்!.. கடைசியா விக்ரம் நடிச்சு சூப்பர் ஹிட்டான படம் எது தெரியுமா?

இதை ஒளிந்து நின்று கேட்கும் முத்து சந்தோஷப்படுகிறார். பின்னர் முத்துவுக்கு வைத்த ஜூஸை அங்கு வரும் விஜயா குடித்து விடுகிறார். மீனா அங்கு வர இதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். விஜயாவுக்கு எதுவும் ஆகுமா என்பதை கேட்க மருந்து வாங்கி கொடுத்த பெண்ணுக்கு கால் செய்ய அவர் எடுக்காமல் போகிறார். இதனால் அவரை பார்க்க கிளம்பி செல்கிறார்.

அப்போ செல்வத்தினை பார்க்க அவர் முத்து குடிக்கவில்லை என்கிறார். ஆனால் மீனா என்னால் எதையும் நம்பமுடியவில்லை எனக் கூறிவிடுகிறார். இதையடுத்து பார்வதி விஜயாவை பார்க்க வீட்டுக்கு வருகிறார். அப்போ பேசிக்கொண்டு இருக்கும் போது விஜயாவுக்கு வயிறுவலி எடுக்க அவர் பாத்ரூம் சென்று வருவதாக இருக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க : நடிகையை டான்ஸ் ஆட வைக்க திணறிய மாஸ்டர்! அஜித் கொடுத்த ஐடியா.. காமெடியாக முடிந்த படப்பிடிப்பு

google news
Continue Reading

More in Cinema News

To Top