திடீரென கேட்ட அஜித்!.. சிவகார்த்திகேயனுக்கு வந்த அந்த ஆசை!.. நடக்குமான்னு பார்ப்போம்!...

நடிகர் அஜித் எப்போதும் வளர்ந்து வரும் சில இளம் நடிகர்களை ரசிப்பார். அவர்களுடன் தொடர்பில் இருப்பார். அவர்களுக்கு தேவையான உதவி செய்வதோடு முக்கியமான அறிவுரைகளையும் சொல்லுவார். மிர்ச்சி சிவா, சிவகார்த்திகேயன் என இந்த லிஸ்ட்டில் பலரும் இருக்கிறார்கள்.

மிர்ச்சி சிவாவிடம் பழகி வந்த அஜித் அவரின் திருமணத்திற்கு 50 லட்சம் அன்பளிப்பாக கொடுத்தார் என சொல்லப்படுவதுண்டு. ஆனால், தமிழ்படம் படத்தில் தன்னையே அவர் கலாய்த்து நடித்ததால் அவர் மீது கோபம் கொண்ட அஜித் அவரின் உறவை துண்டித்துகொண்டார் எனவும் ஒரு செய்தி இருக்கிறது.

இதையும் படிங்க: கில்லி பாத்துட்டு உன்ன லவ் பண்ணேன்… பிரகாஷ்ராஜிடம் சண்டை போட்ட பெண்மணி!…

ஒருபக்கம், சிவகார்த்திகேயன் ஆங்கராக இருந்தபோதிலிருந்தே அவரை ரசித்தவர் அஜித்குமார். ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் சிவகார்த்திகேயன் ஆங்கரிங் செய்யும்போது மேடைக்கு இயக்குனர் வெங்கட்பிரபுவை அழைத்தார். அப்போது ‘இவர் கதை இல்லாம கூட படம் எடுப்பார். ஆனா தம்பி பிரேம்ஜி இல்லாம படம் எடுக்க மாட்டார்’ என சிவகார்த்திகேயன் கலாய்த்த போது அஜித் குலுங்கி குலுங்கி சிரிக்கும் வீடியோ இப்போதும் சமூகவலைத்தளங்களை சுற்றி வருகிறது.

ajith

அதன்பின் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்து ரசித்தவர்தான் அஜித். அஜித் நடித்த ஏகன் படத்தில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். அதோடு, ‘சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். சொந்த தயாரிப்பில் மட்டும் இறங்காதீங்க’ என அவருக்கு அறிவுரையும் சொன்னார் அஜித். ஆனால், அவரின் பேச்சை கேட்காமல் சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு 100 கோடி கடனாளி ஆகி சமீபத்தில்தான் அதிலிருந்து மீண்டார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க: சினிமாவுல வெற்றிடமே இல்லையா… என்ன இப்படி ‘பொசுக்’குன்னு சொல்லிட்டாரு சூரி..!

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் ‘அஜித் சார் என்னிடம் ஒருமுறை ‘சிவா நீங்க பைக் ரேஸ் ஓட்டுவீங்களா?’ எனக்கேட்டார். ஊரில் நண்பர்களோடு ஜாலியாக ஓட்டுவதோடு சரி.. உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது’ என அவரிடம் சொன்னார்.

அஜித் சார் செய்வது மிகப்பெரிய விஷயம். நாடு நாடாக போய் பைக் ஓட்டுகிறார். அவரிடம் இருக்கும் பைக்குகள் என்னிடம் இல்லை. அப்படி ஒரு பைக்கை வாங்கி ஓட்ட கற்றுக்கொண்டு ஒருமுறை அவருடன் செல்ல வேண்டும் என்பது என் ஆசை’ என சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார்.

 

Related Articles

Next Story