More
Categories: Cinema News latest news

முதல் சம்பளத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்த செயல்!… மனுஷன் இவ்வளவு தங்கமானவரா!..

பல இயக்குனர்களையும் போல மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வாய்ப்பு தேடி முன்னேறியவர்தான் எஸ்.ஜே. சூர்யா. வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஹோட்டலில் கூட வேலை செய்திருக்கிறார். இயக்குனர் வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார்.

அஜித்தின் அறிமுகம் கிடைத்து போராடி ‘வாலி’ படத்தை இயக்கினார். தயாரிப்பாளர் எப்போது பணம் கொடுக்கிறாரோ அப்போது மட்டும் படப்பிடிப்பு நடக்கும். சில வருடங்கள் படப்பிடிப்பு நடந்து படம் முடிந்து வெளியாகி ஹிட் அடித்தது. அதன்பின் விஜயை வைத்து இயக்கிய குஷி படம்தான் அவரின் வாழ்க்கையையே மாற்றியது.

Advertising
Advertising

இதையும் படிங்க: லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

அதன்பின் நடிகராக மாறி நியூ, அ.ஆ உள்ளிட்ட சில படங்களை இயக்கி நடித்தார். ஒருகட்டத்தில் வில்லனாக துவங்கி இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய வில்லன் நடிகராக மாறியிருக்கிறார். மாநாடு படத்தில் இவர் காட்டிய வில்லத்தனம் பலரையும் கவர்ந்தது. இப்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் பிஸியாகி விட்டார்.

ஒருபக்கம் அவரின் நடிப்பில் ஹிட் அடிக்கும் படங்கள் வெற்றி பெற்றும் வருகிறது. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த மார்க் ஆண்டனி படத்திலும் கலக்கியிருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் சில தெலுங்கு படங்களையும் இயக்கியிருக்கிறார். நடிகராக இவரை ரசிகர்கள் ரசித்தாலும் இவர் எப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுப்பார் என காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: நான் தப்புனா பாரதியாரும் தப்புதான்… பாடல் வரியை மாற்ற முடியாது… கறாராய் சொன்ன வாலி…

இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்து ஒருமேடையில் எஸ்.ஜே.சூர்யா பற்றி பேசியபோது ‘நானும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒன்றாகவே வேலை செய்தோம். வாலி படத்தில் அவர் சம்பளமே வாங்கவில்லை. அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது சில லட்சங்கள் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தனர்.. நானாக இருந்தால் அதை மறைத்திருப்பேன். வீட்டுக்கு போய் பொண்டாட்டியிடம் கொடுத்திருப்பேன்.

ஆனால், எஸ்.ஜே.சூர்யா அந்த பணத்தை எடுத்துகொண்டு ஒரு பைக் ஷோரூமுக்கு போய் உதவி இயக்குனர்கள் எல்லோருக்கும் பைக் வாங்கி கொடுத்தார். அதில் எனக்கும், ஏ.ஆர். முருகதாஸுக்கும் பைக் கிடைத்தது. இன்னமும் அந்த பைக்கை முருகதாஸ் வைத்திருக்கிறார். அவ்வளவு தங்க மனசுக்காரர் அவர்’ என அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கிய போது மகள் செய்த காரியம்? அப்படிப்பட்டவரா தற்கொலைக்கு முயன்றார்?

Published by
சிவா

Recent Posts