Connect with us
anto

Cinema News

விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கிய போது மகள் செய்த காரியம்? அப்படிப்பட்டவரா தற்கொலைக்கு முயன்றார்?

Actor Vijay Antony: ஒட்டுமொத்த திரையுலகுக்கும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது விஜய் ஆண்டனியின் மகள் மரணம். 12வது படிக்கும் மீரா என்கிற விஜய் ஆண்டனியின் மகள் நேற்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 10 மணி வரைக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக பேசிவிட்டு தூக்க செல்ல இரவு 1 மணியளவில் இந்த மாதிரி சம்பவம் நடந்திருக்கிறது.

இதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் டி.சிவா சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். காலை 8 மணியளவில் இருந்தே சிவா மார்ச்சுரியில் இருந்து விஜய் ஆண்டனியுடனே பயணம் செய்தவர். அங்கு  நடந்த சில நிகழ்வுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதாவது விஜய் ஆண்டனியை ஆரம்பத்தில் இருந்தே நன்கு அறிந்தவர் சிவா.

இதையும் படிங்க: அனிருத்துக்கே ஆப்படிச்சிடுவாரு போல!.. விக்னேஷ் சிவனுக்குள்ள இவ்ளோ திறமை இருக்கா.. எல்லாம் நயன் செயல்!..

யாரையும் மனசு புண்படுத்தும் மாதிரி பேசவே மாட்டார். அவர் கோபப்பட்டு யாரும் இதுவரை பார்த்ததே இல்லை. தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். ஒரு பள்ளி மாணவன்  மாதிரி சூட்டிங் முடிந்ததும் வீடே கதி என்று கிடப்பவர். அநாவசியமாக பார்ட்டி என்று வெளியிலும் செல்ல மாட்டார். தன் வீட்டிற்கு அவரது மனைவி பெயரான பாத்திமா இல்லம் என்றே வைத்திருக்கிறார்.

அவருடைய மனைவியும் அப்படித்தான். இப்படிப்பட்ட பெற்றோரை வைத்து ஏன் இந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் என்றுதான் தெரியவில்லை. ஆனால் வீட்டில் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளியிலும் எந்த தொந்தரவும் இருந்த மாதிரி தெரியவில்லை. ஏனெனில் பள்ளி அளவிலும் புத்திசாலித்தனமான பெண்ணாகத்தான் இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் பட விழாவில் தொகுப்பாளினி மீது அத்துமீறல்! நடிகரை ரவுண்ட் கட்டி லெஃப்ட்ரைட் வாங்கிய சம்பவம்

ஏன் விஜய் ஆண்டனி ஒரு படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது கூட அவர் மனைவி நிலைகுலைந்து கிடந்தாராம். இரண்டு தாடைகளும் நொருங்கி போய் மூக்கில், முகத்தில் அடியுடன் இருந்த விஜய் ஆண்டனியை பார்க்க முடியாமல் அவர் மனைவி பதறி கிடக்க அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது இந்த பெண் மீராதானாம்.

விஜய் ஆண்டனியின் மருத்துவ ரிப்போர்ட்டை பார்த்து தன் அம்மாவிடம் ‘ நான் ரிப்போர்ட்டை எல்லாம் பார்த்துவிட்டேன். ஒரு பிரச்சினையும் இல்லை என்றுதான் போட்டிருக்கிறது. அதனால் இனி கவலைப்பட வேண்டாம்’ என்று சொன்னவர் இந்த மீரா. இப்படிப்பட்ட பெண் எப்படி இந்தளவுக்கு தற்கொலைக்கு முயன்றார் என்றுதான் தெரியவில்லை.

இதையும் படிங்க: இவரு அட்லிக்கே அண்ணனா இருப்பாரு போல!.. லியோ பட போஸ்டர்களை எங்கே இருந்து சுட்டு இருக்காங்க பாருங்க!..

ஆனால் கொஞ்சம் பிடிவாதம் கொண்டவராம். அவர் என்ன நினைக்கிறாரோ அதை அடைந்தே தீர வேண்டும் என்று நினைப்பவராம். ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்து விட்டால் உடனே அதை வாங்கி விட வேண்டும் என்று நினைப்பவராம். ஒரு வேளை இது சம்பந்தமாக கூட வீட்டில் எதாவது நடந்திருக்கலாம். அந்த பெண் வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். ஒரு அப்பாவாக இல்லை அம்மாவாக யாராவது எதாவது சொல்லியிருக்கலாம். அப்படி கூட எதாவது நடந்திருக்கலாம்.

ஆகவே பிள்ளைகளை வளர்க்கும் போது சிறுவயதில் இருந்தே அவர்களிடம் பெற்றோர்கள் ‘NO’ சொல்லி வளர்க்க வேண்டும். எல்லாவற்றையும் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் போது ஒரு கட்டத்தில் முடியாது என்று சொன்னால் அதுதான் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த மாதிரியான விபரீத முடிவை எடுக்க வைக்கின்றது என தயாரிப்பாளர் டி. சிவா கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top