நடிகர் விஜய் தொடர்ந்து தனது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்களில் குடிப்பழக்கத்தை புரமோட் செய்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டை சோஷியல் மீடியாவில் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டுகளாக முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், அகில உலக சூப்பர் ஸ்டாரும் தற்போது சரக்கு பாட்டிலுடன் பாடல் ஒன்றை போட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்கனவே வா குவாட்டர் கட்டிங் என சரக்கை தொட்ட மிர்ச்சி சிவா கெட்டுப் போன நிலையில், மீண்டும் சூது கவ்வும் 2 படத்திற்காக மண்டைக்கு சூரு ஏறுதே.. சூரு.. பீரு.. காரு என ரைமிங்காக பாடலை போட்டு பாடல் முழுவதும் சரக்கு பாட்டிலை குடித்துக் கொண்டே இருப்பது போல பாடல் காட்சியை உருவாக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு ஃபிளாப் கொடுத்து லைஃப்-ஐ தொலைத்த 5 இயக்குனர்கள்!.. படம் பண்ணி பல வருஷம் ஆச்சே!..
எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ஹரிஷா, ராதா ரவி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூது கவ்வும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் போட்ட “காசு துட்டு பணம் மணி மணி” பாடல் இப்போ கேட்டாலும் மஜாவா இருக்கும். ஆனால், இந்த பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை.
குடிகாரர்கள் கொண்டாடும் பாடலாக வேண்டுமானால் இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த சூது கவ்வும் படத்தை முடிந்தவரை கெடுக்காமல் விட மாட்டர்கள் போல என படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை பார்த்து ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைவர்171 புரோமோ டயலாக்கை லோகேஷ் எங்கிருந்து சுட்டிருக்கார் பாருங்க… திருப்பதிக்கே லட்டா?
தளபதி விஜய் படத்திலேயே சரக்கு பாடல் இடம்பெற்று வெற்றி பெற்று வரும் நிலையில், இளைஞர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு நல்ல உதாரண புருஷராக விஜய் மாறியுள்ளார் என்றும் இனிமேல் பாட்டிலுடன் தான் எல்லா ஓப்பனிங் சாங்கும் ஓப்பனாகும் என தெரிகிறது.
சூது கவ்வும் நாடும் நாட்டு மக்களும் என்கிற டைட்டிலில் இந்த படம் உருவாகி உள்ள நிலையில், தர்மம் வெல்லும் என 3ம் பாகம் வேறு வரும் என பகீரை கிளப்பியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…