சியான் விக்ரம் தூக்கத்தை கெடுத்த சூரி!.. அந்த தேதியிலும் தங்கலானுக்கு சிக்கல் வரும் போல தெரியுதே!

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி நடித்துள்ள தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆஸ்கர் ரேஸுக்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து இருந்தார். ஆனால், அமீர் அடித்த அடியில் படத்தின் ரிலீஸே கேள்விக்குறியாகி வருவதாக கூறுகின்றனர்.

பொங்கலுக்கு வருகிறான் தங்கலான் என முதலில் பிளான் செய்யப்பட்ட நிலையில், கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம் படங்கள் என கடும் போட்டியை பார்த்து போட்டியே இல்லாமல் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக திட்டமிட்டனர். ஆனால், தற்போது சூழல் சாதகமாக இல்லாத நிலையை புரிந்துக் கொண்டு அதிரடியாக மார்ச் 29ம் தேதி படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: மச்சக்கார விஜய்சேதுபதி!.. கத்ரீனாவுடன் லிப் லாக்!.. கிறிஸ்துமஸ்னு சொல்லிட்டு பொங்கலுக்கு வருதே!

ஆனால், தற்போது அதற்கும் சூரி நடிப்பில் உருவாகி வரும் கருடன் படம் வேட்டு வைக்க ரெடியாகி விட்டான் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் கதையில் உருவாகி வரும் கருடன் படத்தில் சசிகுமார், சூரி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்னி ஹரி ப்ரியன், இரவின் நிழல் பிரிகிடா சகா நடிப்பில் உருவாகி உள்ள கருடன் திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே வெற்றிமாறன் அமீருக்கு சப்போர்ட் செய்து வரும் நிலையில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி உள்ள தங்கலான் அந்த படத்துடன் மோதினால் சேதாரம் தான் மிஞ்சும் என்றும் கூறுகின்றனர். மேலும், ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா? அல்லது சூரி படத்துடன் சியான் விக்ரம் படம் மோதுமா என சினிமா வட்டாரத்தில் விவாதங்கள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: வெளியேறிய அரண்மனை 4… பொங்கலுக்கு வெளியாகும் 3 படங்கள்!.. இதுதான் ஃபைனல் லிஸ்ட்!..

 

Related Articles

Next Story