பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்து, சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து நடிப்புக் கல்லூரியில் படித்து, இயக்குனர் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து, அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க துவங்கி அதன்பின் கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அவரின் நண்பராக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் ரஜினிகாந்த்.
அதன்பின் ஒரு கட்டத்தில் அவரே ஹீரோவாக நடிக்க தொடங்கி கோலிவுட்டின் வசூல் மன்னனாக மாறினார். அவருக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது. இப்போதுவரை அந்த பட்டம் அவரிடம்தான் இருக்கிறது. ரஜினியின் எல்லா படங்களும் லாபத்தை கொடுத்தன.. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் ரஜினி நடித்தார். ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார்.
ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.. இந்நிலையில்தான் ரஜினி தனது சுயசரிதையை எழுத திட்டமிட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால், சுயசரிதை என்றால் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும்.. ஆனால் ரஜினி அப்படிப்பட்ட நபர் கிடையாது.. தன் வாழ்வில் நடந்த முக்கிய விஷயங்களை அப்படியே சொன்னால் பலரின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ரஜினி அந்த முடிவை கைவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அவரின் மகள் சௌந்தர்யா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘அப்பா இப்போது அவரின் சுயசரிதை நூலை எழுதும் வேலைகளை தொடங்கிவிட்டார்.. அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பா குளோபல் சென்சேஷன்’ ஆகும் என கூறியிருக்கிறார்.
நடிகர் மற்றும்…
ஆதிக் ரவிச்சந்திரன்…
நடிகர் விஜய்…
நடிகர் விஜய்…