Connect with us

Cinema History

இல்லாத படத்துக்கு ஓவர் ஆசைப்பட்ட ஸ்ரீகாந்த்.. பல்ப் கொடுத்த மணிரத்னம்… ஆனா அந்த படம் மாஸ் ஹிட்டாம்..!

Srikanth: தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹிட் நாயகனான ஸ்ரீகாந்த் தன்னுடைய கேரியரை அவரே கெடுத்து கொண்ட சம்பவம் எல்லாம் நடந்து இருக்கிறதாம். அதனால் தான் அவரால் வளரவே முடியவில்லை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட துவங்கி இருக்கிறது.

மணிரத்னம் மாஸ் ஹிட் படத்தில் ஒன்று தான் ஆயுத எழுத்து. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் சூர்யா, மாதவன் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். இதில் மாதவன் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், டும் டும் டும் படங்களை தொடர்ந்து மணிரத்னத்துடன் இணையும் நான்காவது படம் இதுவாகும்.

இதையும் படிங்க: சிங்கிளா களமிறங்கும் சித்தார்த்.. இந்த வார ஓடிடி ரிலீஸ்… எதில் தெரியுமா?

இதனை தொடர்ந்து மூன்றாவது நாயகனுக்கான தேடலில் இருந்தாராம் மணிரத்னம். அப்போது ரோஜா கூட்டம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீகாந்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது. இதை ஸ்ரீகாந்துக்கு வாய் மொழியாக சொல்லி இருக்கின்றனர்.

அந்த நேரத்தில் கலைப்புலி எஸ். தாணு ஒரு படத்தில் ஸ்ரீகாந்தை நடிக்க வைக்க 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம். ஆனால் ஸ்ரீகாந்தோ மணி சார் படம் தானே முக்கியம் என்ற ஐடியாவில் தாணு படத்தினை கிடப்பில் போட்டு விட்டாராம். 

இதையும் படிங்க: லியோ வாய்ப்பை இழந்த முக்கிய பிரபலத்துக்கு எல்சியூவில் வாய்ப்பு கொடுத்த லோகேஷ்… எக்கசக்க ஸ்பெஷலாம்..!

இதனால் ஷாக்கான ஸ்ரீகாந்த் ஒன்னுமே செய்ய முடியாமல் மீண்டும் தாணு படத்துக்கே திரும்பிடலாம் என அவரை பார்க்க போய் இருக்கிறார். ஆனால் அவரோ நான் இப்போ அந்த படத்தினை எடுக்கும் முடிவில் இல்லை. நீ அட்வான்ஸை திருப்பி கொடு எனச் சொல்லிவிட்டாராம். இருந்ததும் போச்சா என்ற நிலையில் ஸ்ரீகாந்தின் இரண்டு வாய்ப்பும் போச்சு என பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top