அருண்குமார் அட்லி ஆன கதை எப்படி தெரியுமா?!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா?!...

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் ஒருவர்தான் அட்லீ. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய திரைப்படங்களில் வேலை செய்திருக்கிறார். ஷங்கரிடம் சேருவதற்கு முன் சில குறும்படங்களை இயக்கினார். ராஜாராணி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார்.
அடுத்தபடமே விஜயை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்தது. அப்படித்தான் தெறி படத்தை இயக்கினார். அடுத்து மீண்டும் விஜயை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். தமிழில் ஏற்கனவே ஹிட் அடித்த படங்களின் கதையை சுட்டு கொஞ்சம் பட்டி டீங்கரிங் செய்து படமெடுக்கிறார் என்கிற புகார் இவர் மீது உண்டு.
இதையும் படிங்க: உங்களுக்காக நடிப்பதையே நிறுத்திடுறேன்!. மைக் மோகனை உருகி காதலித்த நடிகை.. அட நிஜமாதாங்க!..
ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் படங்களை இயக்கி வருகிறார். அட்லியுடன் வேலை செய்வது விஜய்க்கு பிடித்துபோக மீண்டும் பிகில் படம் உருவானது. அதன்பின் ஷாருக்கானிடமிருந்து அழைப்பு வர பாலிவுட் சென்று ஜவான் படத்தை இயக்கினார். படமோ சூப்பர் ஹிட். இந்த படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அட்லியின் நிஜப்பெயர் அருண்குமார். இவருக்கு எப்படி அட்லி என்கிற பெயர் வந்தது என ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார். என் பெரியப்பா நீதிபதியாக இருந்தவர். எல்லோருக்கும் அவர் ஒரு பெயர் வைப்பார். எனக்கு கிளமண்ட் அட்லீ நியாபகமாக அட்லீ என பெயர் வைத்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் கிட்ட போனதான் ஜெயிக்க முடியும்! சிவாஜியின் சூப்பர் ஹிட் பாடலை எழுதிய கவிஞருக்கா இந்த நிலைமை?
எனவே, சின்ன வயது முதலே என் வீட்டில் எல்லோரும் என்னை அட்லீ என்றுதான் கூப்பிடுவார்கள். என் ஊரில் அட்லி என்று சொன்னால்தான் தெரியும். முதல் குறும்படத்தை இயக்கியபோது என் அம்மாவிடம் போட்டு காட்டினேன். இயக்குனர் அருண்குமார் என போட்டிருந்தேன். ஆனால், என் அம்மா ‘அருண்குமார் வேண்டாம். அட்லி என்றே போடு.. உன்னை அப்படித்தானே நாங்கள் கூப்பிடுகிறோம்.. உனக்கு அது சரியாக இருக்கும்’ என்று சொன்னார்.
எனவே, அட்லி என்றே போட்டேன். அந்த குறும்படம் தேசிய அளவில் விருதை பெற்றது. எனவே, செண்டிமெண்ட்டாக அதையே என் பெயராக வைத்துக்கொண்டேன்.