விஜய்க்கு செக் வைக்க அந்த படத்தை களத்தில் இறக்கும் சூர்யா குடும்பம்? பப்பு வேகுமா பாஸ்?..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரவி தேஜா நடித்த டைகர் நாகேஸ்வர ராவ் மற்றும் பாலய்யாவின் பகவந்த் கேசரி உள்ளிட்ட படங்கள் போட்டியாக வெளியாக உள்ளன. ஆனாலும், தெலுங்கிலும் லியோ படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொன்மேனி உருகுது!.. டாப் ஆங்கிளில் தாராளம் காட்டும் அயலான் ஹீரோயின்.. அத்தனையும் அழகு தான்!..

தமிழ்நாட்டில் லியோ படத்துக்கு போட்டியாக எந்தவொரு பெரிய படமும் வெளியாகாத நிலையில், நடிகர் சூர்யாவின் குடும்பம் என்றும் குடும்ப கம்பெனி என்றும் சொல்லப்படும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தமிழ்நாட்டில் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை வாங்கி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பை பார்த்த விஜய் ரசிகர்கள், இந்த முறை அடிக்கிற அடியில சூர்யா விஜய் பக்கமே திரும்பி பார்க்கக் கூடாது என கமெண்ட் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அஜித் 63ன் பட்ஜெட் இதுதான்!. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?!.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ!…

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனமா படத்தை வாங்கி விடுகிறது. ஞானவேல்ராஜா தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் தானே படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறது. அதற்கு சூர்யாவை ஏன் போட்டு பொளக்குறீங்க என சூர்யா ரசிகர்கள் கேள்வி எழுப்பி விஜய் ரசிகர்களையும் லியோ படம் கண்டிப்பா ஃபிளாப் தான் ஆகப் போகுது என சண்டை போட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story