Connect with us
suganya

Cinema News

பாரதிராஜாவை வச்சு ஒரு சின்னப் பொய் சொன்னேன்! இப்படி ஆகும்னு நினைக்கல – சுகன்யா சொன்ன சீக்ரெட்

Actress Suganya: 90களில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சுகன்யா. கமல், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து டூயட் ஆடியவர். ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றவர் சுகன்யா.

நடிப்பு மட்டுமில்லாமல் சிறந்த பரத நாட்டிய கலைஞரும் கூட. ஆரம்பத்தில் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல்தான் இருந்தாராம் சுகன்யா. படிப்பு மற்றும் பரத நாட்டியத்தின் மீதுதான் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…

ஏகப்பட்ட அரங்கேற்றங்களை நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய ஜூனியர் ஒருவர் அன்பாலயா பிரபாகரனுக்கு உறவுக்காரராக இருந்தாராம். அப்போது சுகன்யா அந்த ஜுனியர் மாணவியை வீட்டில் டிராப் செய்வதற்காக செல்ல அன்பாலயா பிரபாகரன் சுகன்யாவை பார்த்துக் கொண்டாராம்.

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வசந்துடன் சேர்ந்து அன்பாலயா பிரபாகரன் சுகன்யாவை தன் படத்தில் நடிக்க வைக்க ஏகப்பட்ட  முயற்சிகளை செய்திருக்கின்றனர். ஆனால் சுகன்யா முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். இன்னொரு பக்கம் சுகன்யாவின் அரங்கேற்றத்தை பார்த்த பாரதிராஜா தன் படத்தில் நடிக்க வைக்க அவரும் முயற்சி செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான! வனிதாவை பந்தாடிய அந்த கும்பல் – ஓ அதுதான் காரணமா?

இருந்தாலும் சுகன்யா மறுத்துவிட்டாராம். ஆனால் வசந்தும் அன்பாலயா பிரபாகரனும் விடாமல் துரத்திக் கொண்டிருக்க வேறு வழியில்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க நான் பாரதிராஜாவின் படத்தில் கமிட் ஆகிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார் சுகன்யா.

உடனே இவர்கள் இருவரும் நேராக பாரதிராஜாவிடமே சுகன்யாவின் கால்ஷீட்டை கேட்டிருக்கிறார்கள். அதற்கு பாரதிராஜா அந்த பொண்ணு அப்படியா சொன்னுச்சு என கேட்டு சுகன்யாவிடம் ‘இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்து விடு’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான! வனிதாவை பந்தாடிய அந்த கும்பல் – ஓ அதுதான் காரணமா?

வேறு வழியில்லாமல் நடித்த படம்தான் ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படம். அந்த திரைப்படத்திற்காக சுகன்யாவிற்கு 9 விருதுகள் கிடைத்ததாக சுகன்யா ஒரு பேட்டியில் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top