
கோலிவுட்டில் 30 வருடங்களுக்கு மேல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இப்போதுள்ள பல இயக்குனர்களுக்கும் சீனியர் இவர். அதேநேரம் இப்போதுள்ள இளம் இயக்குனர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். காதல் கலந்த காமெடி படங்கள் இவருக்கு கை வந்த கலை. அதே நேரம் அரண்மனை படம் மூலம் ஹாரர் காமெடிக்கு மாறினார்.. தற்போது அதில் 4 பாகங்கள் வெளியாகிவிட்டது.
திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் சுந்தர்.சி. அப்படி அவர் தயாரித்திருக்கும் திரைப்படம்தான் ஒன்றுதான் டபுள் ஆக்குபன்ஸி (Double Occupancy). இந்த திரைப்படத்தை அஸ்வின் கந்தசாமி என்பவர் இயக்க புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கிறார்.. ஒரு பக்கம் ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் காதலிக்கப்படும் அந்த ஆணும், பெண்ணும் ஒரே நபராக மாறுகிறார்கள். அது கூட பிரச்சினை இல்லை.. ஏதோ புதிதாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் அந்த கதாபாத்திற்கு ரஜினி என பெயர் வைத்திருக்கிறார்கள்..
சுந்தர்.சி ரஜினியை வைத்து படமெடுக்க முயற்சி செய்தார். ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காததால் வெளியேறினார். எனவே ரஜினி மீதுள்ள கோபத்தில் இப்படி அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.. அல்லது கதையில் அந்த கதாபாத்திரத்திற்கு ரஜினி என தலைப்பு வைக்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் படம் வெளியான பின்னரே தெரியவரும்..