More
Categories: Cinema News latest news

காளையுடன் சண்டை போடுவார்னு பாத்தா? சூர்யாவை ப்ளே ஸ்டேசனில் தள்ளிவிட்டு வேடிக்கை காட்டும் சிறுத்தை சிவா

Surya Ganguva Movie: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி  நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கைவசம் நிறைய படங்களை வைத்துச் சுற்றி கொண்டிருப்பவர். தற்போது சிறுத்தை சிவாவுடன் இணைந்து கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், அடுத்ததாக சுதா கொங்கராவுடன் மீண்டும் ஒரு படம். அதுபோக தெலுங்கு , ஹிந்தி என பல இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்திக் கொண்டு வருகிறாராம் சூர்யா.

Advertising
Advertising

இதையும் படிங்க: கமலுக்கே அல்வா கொடுக்க நினைத்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சி வாழ்நாள் தண்டனையை கொடுத்த ஆண்டவர்..

ஏற்கனவே மும்பையில் செட்டிலாகிவிட்டதால் பாலிவுட்டில் அவரின் அறிமுகம் நிச்சயமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் ஜோதிகா அஜய் தேவ்கானுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரை பின் தொடர்ந்து சூர்யாவும் தனது பங்களிப்பை பாலிவுட்டில் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் சில காட்சிகள் சென்னை இவிபியில் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகின.

இதையும் படிங்க: ஒன்னா களமிறங்கும் தல தளபதி… யாரும் சண்டை மட்டும் போட கூடாதுப்பா…

விசாரித்ததில் முதலையுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாராம் சூர்யா. அதாவது கிராஃபிக்ஸ் முதலையுடன் சண்டை போடுகிற மாதிரியான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றதாம்.

சூர்யா காளையுடன் கம்பீரமாக சண்டை போடுவார் என வாடிவாசலில் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சிறுத்தை சிவா இப்படி முதலையுடன் சூர்யாவை சண்டையிட வைத்து வேடிக்கை காட்டி வருகிறார். இது எங்க போய் முடிய போகிறது என்று தெரியவில்லை.

இதையும் படிங்க: வாசலில் காத்து கிடந்த ரஜினி… பொறுமையாக தூங்கி எழுந்து வந்த கமல்ஹாசன்… அதுக்குனு இப்டியா?

ஒரு முன்னணி மாஸான நடிகர். அவரை இந்த மாதிரி சிறு பிள்ளைத்தனமாக கிராஃபிக்ஸ் முதலையுடன் சண்டை போடுவது மாதிரி எடுத்தால் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற சந்தேகமும் எழுகின்றது.

மேலும் இந்தக் காட்சிகளை முடித்த கையோடு படக்குழு தாய்லாந்த் செல்ல இருக்கின்றதாம். அங்கு நிஜ முதலைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து விட்டு இரண்டையும் சேர்த்து எடிட் செய்ய இருக்கிறார்களாம்.

 

Published by
Rohini

Recent Posts