நான் தரேன்… சரோஜாதேவிக்காக சூர்யா செய்த செயல்.. முந்திக்கொண்டு முன்னே வந்த உதயநிதி!

Saroja Devi: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் என்ன தான் உச்ச நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் கூட அவர்களுக்கு சம்பளம் ஆயிரங்களில் தான் வழங்கப்பட்டது. சில டாப் நட்சத்திரங்கள் மட்டும் சமீபத்திய படங்களில் நடித்து கோடியை பார்த்து இருக்கின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்திலும் நடந்தது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு, முரளி, பி. சரோஜா தேவி, ராகுல் தேவ், சாயாஜி ஷிண்டே, ஆனந்த் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இதையும் வாசிங்க:கடனில் சிக்கி வீடு ஜப்தி!.. கண்ணதாசன் எழுதிய அந்த பாட்டு!.. கவிஞருக்கு இவ்வளவு சோகமா!..

திரைப்படம் 17 அக்டோபர் 2009 அன்று கலவையான விமர்சனங்களுடன் வெளியானது ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. "ஏனோ ஏனோ பனித்துளி" பாடல் ஐஸ்லாந்தில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம் ஆதவன் தான்.

இப்படத்தில் கன்னடத்து பைங்கிளி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட சரோஜா தேவி நடித்திருந்தார். அவருக்கு சம்பளமாக ஒரு கோடியை கொடுக்க வேண்டும் என சூர்யாவே கேட்டுக்கொண்டாராம். தயாரிப்பாளருக்கு கஷ்டத்தினை கொடுக்க கூடாது என நினைத்த சூர்யா என் சம்பளத்தில் இருந்து பிடித்துகொள்ளுங்கள் எனவும் கூறினாராம்.

இதையும் வாசிங்க:இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..

ஆனால் ஆதவன் படத்தினை தயாரித்தது உதயநிதி ஸ்டாலின் தான் என்பதால் சூர்யாவின் சம்பளம் மொத்தமாக கொடுக்கப்பட்டது. அதேப்போல சரோஜாதேவிக்கும் ஒரு கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story