Connect with us

Cinema News

உன் படத்தை 1000 ரூபாய் கொடுத்து யாராவது பார்ப்பானா!.. ரஜினி பற்றி எஸ்.வி. சேகர் சரவெடி!..

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய பேச்சு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தும் எனக்கும் ஒரே வயது தான். சென்னைக்கு ரஜினி வந்தபோது ஆல் இந்தியா ரேடியோவில் அவரது குரலை நான் தான் பதிவு செய்தேன். அதற்காக நான் ரஜினி போல இருக்க வேண்டும் அது எந்த ஒரு கட்டாயமும் கிடையாது.

இதையும் படிங்க: அஜித்தா? விஜயா? கேட்ட கேள்விக்கு பளீர்னு பதில் சொன்ன எஸ்.ஜே.சூர்யா – பழச மறக்காத ஆளுனு நிரூபிச்சிட்டாரு

சிவாஜியைப் போல உலகத்திலேயே தேடினாலும் எந்த ஒரு நடிகரும் கிடைக்க மாட்டார்கள். அதேபோலத்தான் எம் ஜிஆரும் அந்த மூன்று எழுத்துக்கு ஒரு மந்திரம் உள்ளது எம்ஜிஆர், சிவாஜியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அந்த மூன்றெழுத்து மந்திரமாக உள்ளார்.

ரஜினி படத்துக்கு ₹1000 டிக்கெட் என்று சொன்னாலும் ரசிகர்கள் முதல் நாள் ஷோக்கு முந்தி அடித்து தியேட்டருக்கு ஓடுவார்கள். ஆனா உன் படத்துக்கு அப்படி எவனாவது வருவானா. இதுதான் சினிமா.

இதையும் படிங்க: இது என்னடா வெற்றிமாறன் யூனிவர்ஸா!.. விடுதலை 2வில் யாரெல்லாம் வரப்போறாங்க தெரியுமா?..

ஜெயிலர் படம் வந்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு போனார்கள். அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது. நானும் சாதித்திருக்கேன். 25 டிராமா 7000 ஷோக்கள் உலகம் முழுக்க இந்த சாதனையை வேற யாராலும் முறியடிக்க முடியாது.

அடுத்தவங்களை பார்த்து பொறாமை படக்கூடாது. நாம என்ன செய்கிறோம் நாம என்ன சாதிக்கிறோம் என்பதில் தான் தெளிவாக இருக்க வேண்டும். அதை வைத்து சந்தோசப்படுபவனே சிறந்த மனிதன். என் பேர்ல எந்த ஒரு கடனும் இல்லை அதுதான் நான் சம்பாதிச்ச சொத்து.

வீட்ல கோடிக்கணக்குல சொத்து வச்சுக்கிட்டு, வேலைக்காரியை உள்ள விடாம சில வீட்ல வீட்டு அம்மாவே ஐயோ இந்த ரூமுக்கு வந்திராத இதை சொல்லும் அளவுக்கெல்லாம் இருந்தால் நிம்மதி எங்கிருந்து வரும் என எஸ் வி சேகர் அந்த நிகழ்ச்சியில் சரவெடியாக பேசியுள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top